பக்கம்:தமிழர் மதம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் பரவெளி யுடம்பின் நடுவில் நின்று இறைவன் நெஞ்சம் இயங் குவதாகக் கோடித்து (பாவித்து), அவன் முத் தொழிலையும் இன்ப நடமாக வுருவகித்து, அவனை நடருள் தலைவனாக்கி, நடவரசன் (நடநாயகன், ஆடவல்லான்) என்று குறித்தனர். இவ்வுருவகம், "அண்டத்திற் கொத்தது பிண்டத்திற்கும்.'> என்னும் உண்மையை, பிண்டத்திற் கொத்தது அண்டத்திற் கும் எனக் காட்டிய வாறாம். FQ. குமரிநா டிருந்த பண்டைக் காலத்தில், குமரிமலைக்கும் பனி மலைக்கும் நடுவிடத்தி லிருந்த தில்லை நகரைப் பாண்டியன் பாருக்கு நெஞ்சத் தாவாகக் கொண்டு, அங்கு நடவரசன் திருப் படிமை நிற்க அம்பலம் அமைத்தான். நடவரசப் படிமைகள் நிற்கும் கோவில்க ளெல்லாம், அம்பல மென்று பெயர் பெற்றிருப் பது கவனிக்கத் தக்கது. அம்பலம் ஆடரங்கு. அம்பலக் கூத்தன், மன்றாடி என்பன தில்லைச் சிவன் பெயர்கள். பேரம்பலம் ஏற்பட்ட பின், ஆடம்பலம் சிற்றம்பலம் எனப்பட்டது. அப்பெயரே இன்று சிதம்பரம் எனத் திரிந்து வழங்குகின்றது. சிற்றம்பலம் பொன் னால் வேயப்பட்டபின், பொன்னம்பலம் எனப்பட்டது. அதன் பின்னரே மணியம்பலம் வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலி யவை தோன்றின. கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை, அகக் கரண வளர்ச்சி யடையா த பொது மக்கட் குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே அம்பலமாகக் கருதுவர். அப் பர வெளி யம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பல மருமம் (சிதம்பர ரகஸியம்) என வழங்குவது. நளி - நடி - நடம், நடனம். நடம்--நட்டம் - நட்டுவன். நட்டம் - வ.நீருத்த, நாட்ய. அரசன் என்னும் தென்சொல் வரலாற்றைத் தமிழர் வரலாறு என்னும் நூலிற் காண்க. உம்முதல் = கூடுதல். உம்--அம்-அமை. அமைதல்= க.நெருங்குதல், அடர்தல். "வழையமை சாரல்’’ (மலைபடு. கஅக). உ.கூடுதல். அமை - அவை -கூட்டம், குழாம். ௩.பொருந்துதல். "பாங்கமை பதலை ’’ (கந்த பு.திருப்பர.கூ). நிறைதல். 'உறுப் பமைந்து (குறள். எசுக).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/58&oldid=1428915" இலிருந்து மீள்விக்கப்பட்டது