பக்கம்:தமிழர் மதம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் வள்ளி பிறப்பு தொண்டை நாட்டில், வெள்ளிமலை யருகில் மேற்பாடி என் னுஞ் சிற்றூரை, நம்பி யரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பெண் மக வின்மையால், ஒரு பெண் மகப் பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு வந்தான். அக் காலத்தில், சிவ முனி எ ன் பவன், அம் மலை யருகில் ஐம்புலனையும் அடக்கிச் சிவன் மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஓர் அழகிய இளம் பெண் மான் அவனருகில் வந்து உலாவியது. அதைக் கண்டு, அவன் கரை யிறந்து காமுற்று மதி மயங்கிப் பேரிடர்ப் பட்டான். அவன் காமக் காட்சியினால் அம்மான் கருவுற்று,உரிய காலத்தில் ஒரு பெண் மகவை யீன்று, வள்ளிக் கிழங் ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது. அக் குழவியைக் கண்ட நம்பி யரசன் எடுத்து, வள்ளிக் கிழங்குக் குழியிற் கிடந்தது பற்றி வள்ளி யென்று பெய ரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான். அவள் வளர்த்தாள். சிவ முனிவன் இளம் பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை, "போர்த்தொழில் கடந்த வைவேற் சீர்த்திடு நவ்வி தன்னைச் பார்த்தலு மிளைமைச் செவ்வி தூர்த்தனின் மைய லெய்திக் எ௪ புங்கவ னருளால் வந்த சிவமுனி யென்னுந் தூயோன் படைத்திடும் பிறனிற் கண்ட காமத்தாற் சுழல லுற்றான்." "ஏமத்தின் வடிவஞ் சான்ற் காமத்தின் வேட்கை இலங்கெழிற் பிணையின் மாட்டே வைத்துக் கவலையா லவல மெய்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/95&oldid=1428964" இலிருந்து மீள்விக்கப்பட்டது