பக்கம்:தமிழர் மதம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் திருமால் தோற்றரவுக் கதைகள் திருமாலின் 'தசாவதாரம்' என்னும் பத்துத் தோற்றரவுக் கதைகளும் ஒரே காலத்தில் தோன்றியவை யல்ல. முதலில் எட்டும், பின்னர்த் தொண்டும் (ஒன்பதும்), அதன் பின் பத்து மாகக் கணக்கிடப் பட்டு வந்திருக்கின்றன. முத லெட்டும் பாரதக் காலத்திற்குப் பின்னரே தோன்றி யிருத்தல் வேண்டும். சில பனுவல்கள் புத்தரைத் தொண்டாம் (ஒன்பதாம்) தோற்றர வாகக் குறிக்கும். அக முதல் தோற்றரவுக் கதை, சத பத பிராமணத்திற் சொல் லப் பட்டுள்ள சத்திய விரதன் கதையை அடிப்படையாகக் கொண்டிருப்ப தாகத் தெரிகின்றது. அவன் கடல் கோளி னின்று- தப்பிய கப்பலே, மீனாக உருவகிக்கப் பட்டதாகத் தோன்று கின்றது. அவன் தமிழரசன் (திரவிடபதி) என்றும், அரச முனி வன் (ராஜ ரிஷி) என்றும், கூறப் பட்டிருப்பது கவனிக்கத் தக்கது. உ-ஆம் தோற்றரவுக் கதை, சு ைர (ஸுரா) யுண்டவர் சுரர் என்னும் கருத்தையோ, நில நடுக்கத்தோடு கூடிய ஒரு கடல் கோட் கதையையோ, தழுவியதாக இருக்கலாம். ௩-ஆம் தோற்றரவுக் கதை, நிலம் நீரினின்று தோன்றிற்று என்னுங் கொள்கையைத் தழுவிய தாகும். "உண்முறை வெள்ள மூழ்கியார் தருபு மீண்டு பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி யொருவினை யுணர்த்தலின் முதுமைக் கூழி யாவரும் உணரா வாழி முதல்வறிற் பேணுதுந் தொழுது.33 (பரி. உ : க0-ககூ).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/97&oldid=1428967" இலிருந்து மீள்விக்கப்பட்டது