பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கதையில் பாரதி காற்றின் ஆக்க சக்தியைப் புகழ்கிறான். ஆக்க சக்தியைக் காதலாக உருவம் கொடுக்கிறான். ஆக்க சக்தியின் சிறப்பான அம்சம் காதல். அது படைப்பின் அடிப்படை, ஷெல்லி விதை முளைப்பது காற்றின் ஆக்க சக்தியென்றான். பாரதி காற்றின் காதலில், காற்றின் ஆக்க சக்தியைப் புலப்படுத்துகிறான்.

ஷெல்லியும் கடலின் அடியில் காற்றுப் புகுந்து அழிவு செய்வதைக் கூறுகிறான். பாரதி இதனையும் ஒரு காட்சியாக மாற்றிக் கூறுகிறான்.

நடு கடல், தனி கப்பல்
வானமே, சினந்து வருவது போன்ற புயல்காற்று,
அலைகள் சாரி வீசுகின்றன, நீர்த்துளி படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன. சூறையாடுகின்றன,
கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது;
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது.

பாறையில் மோதிவிட்டது.


ஹதம்!

இரு நூறு உயிர்கள் அழிந்தன!! கப்பல் விபத்திலிருந்து யுக முடிவிற்கு அழைத்துச் செல்கிறான் பாரதி,

‘ஊழி முடிவும் இப்படித்தான் இருக்கும்
உலகம் ஒரே நீராகி விடும். தீ நீர்
சக்தி காற்றாகி விடுவாள்,
சிவன் வெளியிலே யிருப்பான்.’

இவ்விரண்டு கதைகள் கூறி பாரதி ஷெல்லியின் முடிவுக்கே வருகிறான்.

‘காற்றே யுக முடிவு செய்கின்றான்,
காற்றே காக்கின்றான்,’

ஷெல்லியின் சொற்கள் இவை:

"Destroyer and Preserver
hear of hear'

110