பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு கவிஞர்களின் ஒற்றுமைகளையும் மேலே கண்டோம். உயிர் மீது பாரதி கொண்டிருந்த பெரும் பற்று ஷெல்லியின் கவிதையில் இல்லை. இப்பற்றுதான் பாரதியை மனித வர்க்கத்தின் வருங்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்தது. காற்றை அடக்கியாளும் மனோவலிமையை அவனுக்கு அளித்தது. ஷெல்லியோ தனது காய்ந்த உள்ளம் தளிர்க்க காற்றைத் துணை செய்யக் கோருகின்றான். பாரதியோ,

‘தென்னையின் காற்று சலசல
வென்றிடச் செய்து வரும் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டு ஏறித்தரியும் வீர்
உள்ளம் படைத்து விட்டோம்.’

என்று பாரதி பெருமையோடு பேசுகிறான்.

114