பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு... வாணிகம் 157 "முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் என்ப". - தொல் : பொருள் : புறம் ! 10. உரையாசிரியர் நச்சினார்க்கினியர், "யவனர் இயற்றிய பலபொறிகளும், ஏனைய பொறிகளும்" என, யவனர், அக்கால அரசர்களுக்குப் படைக்கலப் பொறிகள் பண்ணித் தந்ததைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டை மதில்கள் பல்வேறு பொறிப்படைகள் பொருத்தப்பெற்றுப் பகைவர் எளிதில் நுழையாவாறு காக்கப்பட்டிருக்கும் என்பதைத் "திங்களும் துழையா எந்திரப் படுபுழை" என்ற புறநானூற்றுப் பாடல் வரியும், (177 : 5 தெளிவாக்குகிறது. மதுரையில் அரசன் பெருங்கோயிலைச் சூழ இருந்த மதில் வாயிற்கண் பொருத்தப் பெற்றிருந்த பொறிப்படைகளின் பட்டியலைச் சிலப்பதிகாரம் வெளியிட்டுளது. "1) வளைந்து தானே எய்யும் எந்திர வில், 2) கரிய விரல்களை உடைய கரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி, 3) கற்களை உமிழும் கவண் பொறி, 4) கொதிக்கும் எண்ணெயை வாரி இறைக்கும் பொறி, 5) உருக்கிய செம்பை உமிழும் பொறி, 5) உருக்கிய எஃகை உமிழும் பொறி, 7) கல்லுமிழ் கவனுக்கு வேண்டும் கற்களைக் கொடுத்து உதவும் பொறிக் கூடை, 8) தூண்டில் வடிவில் பண்ணப்பட்டு, மதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் தூண்டிற் பொறி, 9) கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி, 10) ஆடவர் தலை போலும் தலையுடையதான ஆண்டலைப் புள் வடிவில் இருந்து வருவார் தலையைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி, 1) கிடங்கில் ஏறின் மறித்துத் தள்ளும் இருப்புக் கவை, 12) கழுக்கோல், 13) அம்புக்கட்டு, 14) அம்புகளை எய்யும் ஏவறைகள், 15) ஐயவித்துலாம், 16) மதிலைப் பற்றுவார் கைகளைக் குத்திப் பொதுக்கும் ஊசிகள், 17) கிச்சிலிப் பறவை போல், பாய்ந்து சென்று பவைர் கண்களைக் கொத்தி மீளும் பொறி, 18) மதில் மீது ஏறினார் உடலைக் கொம்பால் குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் நிற்கும் பொறி, 19) மூங்கில் வடிவில் நின்று அடித்து நொறுக்கும் பொறி 20) கதவுக்கு அரணாக, உள்வாயிற் படியில் நிலத்தில்