பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 . தமிழர் வரலாறு தோன்றுதல் இயலாது. அசோகன், ஆந்திரர் மீது, தெளி வில்லாத ஒரு வகை மேலாதிக்கத்தைக் குறிப்பாக உணர்த்துகிறான். இது கி. மு. நான்கு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆந்திர அரசர்கள், மகாபத்ம நந்தனிலிருந்து வரும், மகதப் பேரரசர்கள், வல்லமையில் தங்களிலும் சிறந்தவர்; மரியாதைக்காகத் தங்களிடமிருந்து நன்கொடை பெற உரிமையுடையவர் என்பதை ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் பொருள் படுமேயல்லாது, ஆந்திரப் பகுதி, மகதப் பேரரசின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது என்பது பொருளாகாது. மேலும், பெரும்பாலும் மெகஸ்தனிஸின் கூற்றுக்களிலிருந்து மேற்கோள் காட்டி, ஆந்திர நாடு, எண்ணற்ற சிற்றுரர்கள் அல்லாமல், மதில் சூழ்ந்த நகரங்கள் முப்பதையும் 1,00,000 வீரர்கள், 2000 குதிரைகள், 1000 யானைகள் கொண்ட ஒரு பெரிய படையையும் கொண்டிருந்ததாகத் திரு. பிளைனி அவர்கள் நமக்கு அறிவிப்பதை, வி. ஏ. சிமித் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இச்செய்திகள், உண்மையில், மெகஸ்தனிஸிடமிருந்தே வந்தனவாயின், அது, மெளரியர் காலத்தில், ஆந்திர அரசர்கள், பரந்த, ஆற்றல் மிக்க தன்னாட்சிப் பகுதியைப் பெற்றிருந்தனர் என்பதைக் காட்டுவதாகும். அசோகன் காலத்தில், ஆந்திரர்கள், தங்கள் அரசர்களின் ஆட்சியின் கீழ்ப் பெரிதும் மதிக்கத் தக்க தன்னாட்சி உரிமையை அனுபவித்திருந்தனர் என்றும் திரு. £)u£lg ayairf&cir &@5gyôprrff. [V. A. Smith Early History of India. Page 217-18 and Footnote], . - - புராணங்கள், தங்கள் ஆந்திர அரசர்களின் பட்டியலைக் கிமுகளைக் கொண்டு தொடங்குகின்றன. இன்றைய வரலாற்று அறிஞர்கள், அவன், கி. மு. மூன்றாம் நூற்றா ண்டின் இறுதியில் ஆட்சி புரிந்திருந்ததாக எண்ணுகின்றனர். அப்படியென்றால், கிமுகளுக்கு முன்னர், ஆந்திர அரசர்கள் இல்லை என்பது பொருளா? இல்லை; காரணம், மெகஸ்தனிஸ் கூறும் ஆந்திர நாடு, அதன் சொந்த அரசர்களாலேயே ஆளப்பட்டது. புராணங்களில் வரிசைப் படுத்திக் கூறப்பெறும் கலியுக அரச இனங்கள், ஆரிய