பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 177 அனைத்திலும் உள்ள பல்லவரின் வேறுபட்டவராகக் கொண்டு, அவர்களுக்கு, ஒரு தமிழர் மூலத்தைக் காணும் பயனில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய மொழிகளில், "பார்த்தியன்" என ஆகும், ஒரு பழங்குடி இனத்தவர் பெயராம், "பார்த்தவ" என்பதன், இந்தியத் தன்மையதா ஆக்கப்பட்ட பகலவ, பல்லவ இரண்டும் ஒரே சொல் ஆகும்.) காஞ்சியின் பழைய பல்லவ அரச இனம் : காஞ்சியில், தன்னை நிலைபெறச் செய்துகொண்ட முதல் பல்லவன், பெரும்பாலும், பப்பா. அவன், ஆத்ரேய, ஹாரித, பாரத்வாஜ, கெளஸிக, காஸ்யப, மற்றும் வத்ஸ்கோத்திரப் பார்ப்பனர்களுக்கு, நூறாயிரம் காளைப் கலப்பைகளை, ஆயிரமாயிரம் பொற்காசுகளை நன்கொடையாக அளித்தான் எனக் கூறப்படுகிறான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருள் ஒருவனும், தன் முன்னோன் பப்பாவின் அறப்பணிகளைக் குறிப்பிடுபவனுமாகிய சிவகந்தவம்மன்", "அக்னிஷ்டோமம், வாஜபெய, அஸ்வமேத யாகங்களைச் செய்தான், இவ்வுண்மைகள், பண்டை நாட்களில், காஞ்சி மாநகரத்தில், பார்ப்பனர்களுக்குப் (தென்னிந்திய ஆரியர்) பஞ்சம் இல்லை. ஆகவே, அந்நகரம், பல்லவ ஆட்சி தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, ஆரிய மயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன, சிவகந்தவம்மனுடைய செப்பேடுகள், அவனுடைய மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம், அர்த்த சாஸ்திரத்தில் விளக்கியுள்ளவாறும், சாணக்கியனை அடுத்து வந்த அறம் கூறுவோரால் வளர்க்கப்பட்டவாறும் ஆரிய நெறியில் நடத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறன்றன. பேரரசின் உட் பிரிவுகள், அவற்றை ஆட்சிபுரிந்து வந்த அரசு அலுவலர்கள், வரிகள், நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலமாயின், அதற்கான வரிவிலக்கு ஆகிய அனைத்தும், சமஸ்கிருதச் சொல்லமைப்பு முறையில் குறிப்பிடப் பட்டுள்ளன. அந்த மானியப்பட்டயம், அரசவை ஆலோ சனைக் குழுவினர் ஒருவரால், அவர் கைப்பட எழுதப்பட்டது. பின்னர்ச் செப்புத் தகட்டில், செதுக்கப்பட்டது. இறுதியாக,