பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தமிழர் வரலாறு குன்றம், எருமைநாடு, குடகடலைச் சார்ந்த, சேரநாட்டு எல்லைக்குட்பட்டனவாய, குதிரை, கொல்லி, கோடை மலைகள், பாழிப்பெருநகர், வாகைப்பறந்தலை, முசிறி, தொண்டிக் கடல்துறைகள், குணகடல் நாடாம் சோழ நாட்டைச் சேர்ந்த, இடைக்கழிநாடு, கடல்மல்லை, கழார், அழிசி, ஆர்க்காடு, புகார், பாண்டி நாட்டு எல்லைக்குட்பட்ட, தோட்டி, பறம்பு, பொதினி, பொதியம், முதிரம், சிறுமலை ஆகிய மலைகள், கொற்கைத்துறை, ஆகிய இடங்களில் எல்லாம், சுருங்கச் சொல்லின், வடவேங்கடம், தென்குமரி, குணகுட கடல்களை எல்லையாகக் கொண்ட தமிழகம் முழுவதும், தமிழ்மொழி வழங்கியது போலவே, தமிழரசர்களே, நீக்கமற இடங்கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர் என்பது. குமரிமுதல் வேங்கடம் வரையான தமிழகம் முழுவதும், தமிழே வழங்கி வந்தது, தமிழரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தது என்பதை மெய்ப்பிக்கும் இத்தனை அகச்சான்றுகள் இருக்கவும், காஞ்சியும், அதைச் சூழ உள்ள நாடும் தமிழரசர் களால் ஆளப்படவில்லை ; மாறாகச் சமஸ்கிருத ராஜாக் களால் ஆளப்பட்டு வந்தது எனத் திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கூறுவதற்கு அவர் காட்டும் முதற் காரணம், காஞ்சி ஆண்ட பழைய அரசர்கள் பெயர்கள், பழந்தமிழ்ப் பாக்களில் குறிப்பிடப்படவில்லை என்பது. இம்முடிவு உண்மைக்கு மாறானது; பகையரசர்களை வென்று அப்பகை நாட்டு மண் அளிக்கும் பயன் உண்டு வாழும் வீரவாழ்வும், போர்த்தொழில் வல்லமையால் தலையாய சிறப்புற்ற யானைப்படையும், வளமான தேர்ப்படையும் உடைய தொண்டையரை அறிந்துள்ளார், வேங்கட நாட்டவராய கல்லாடனார். "பொருவார் மண் எடுத்து உண்ணும், அண்ணல் யானை வண்தேர்த் தொண்டையர்" (குறுந் : 260). யானைப் படையால் பெருமையுற்ற அத்தொண்டையர் வேங்கடமலை நாடாண்டவர் என்கிறார் தாயங்கண்ணனார். "வினைநவில் யானை விறல்போர்த் தொண்டையர் இனமழை தவழும்