பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 227 இப்பாட்டிலிருந்து உய்த்துணரப்படும், கரிகாலன் ஆட்சி, வடக்கே, கடப்பை, கர்னூல் மாவட்டங்கள் வரையும் பரவியிருந்தது என்ற உண்மையை உறுதி செய்வதற்கு எண்ணற்ற கல்வெட்டுச் சான்றுகளும் உள. அவை, தனியே ஆராயப்படும். - - இப்பாட்டு, கரிகாலன், காடுகளை அழித்து அவற்றை யெல்லாம் வாழிடங்களாக மாற்றினான் என்றும் கூறுகிறது. ("காடுகொன்று நாடு ஆக்கி"- பட்டினம் : 283). அது, சோழ நாட்டில் நிகழ்ந்ததாக, உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார். ஆனால் சோழ நாடு முழுவதும், இம்மன்னனுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே மக்களால் வாழப்பட்டு விட்டது; ஆகவே, இச்செயற்கரும் செயல், மிகமிகக் குறைவான மக்கள் தொகையினை உடையவாய கடப்பை, கர்னூல் மாவட்டங்களையே குறிப்பிடுவதாகும். (சோழநாடு, ஐந்நிலம் என அழைக்கப்படாமல் நானிலம் என்று மட்டுமே அழைக்கப்படுவதற்கு ஏற்ப, ("நால்நாடு"- பொருநர் : 226) அந்நாட்டில் பெருமணல் பரந்த பாலை நிலம் அறவே இல்லை. "உள்ளுர் ஆவணங்கள், பழைய "ரேனாடு" ஆகிய இன்றைய கடப்பை, கர்னூல் மாவட்டத்து மக்கள், கரிகாலன் படையெடுப்பை, இன்றும் நினைவில் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. "கைம்யத்" ஆவணம் ஒன்றின்படி, சூரிய வம்சத்துக் கரிகால மகாராஜா, மேற்கை வெற்றி கொண்டுவிடவே, இந்நாட்டின் உரிமையை பெற்றுவிட்டான். 'கரிகிரி" மலையின் தென்பால் சரிவில் காடுகளை அகற்றிப் "பொத்தப்பி" என்ற ஒரு சிற்றுரை நிறுவினான். அதைச் சூழ, எண்ணற்ற சிற்றுார்கள் தோன்ற ஊக்கம் ஊட்டினான். அச்சிற்றுார்களில், பொத்தப்பி, மிகவும் முக்கியமானதாக இருந்தமையால், அதைச் சூழ உள்ள சிற்றுரர்கள், "பொத்தப்பி நாடு" என்ற பெயரைப் பெற்றன. (திரு. என். வெங்கட்ரமனய்யா அவர்கள், சென்னைக் கிறித்துவக் கல்லூரி மலர், 1929 சனவரி வெளியீட்டில் எடுத்தாண்டிருக்கும் .R.Vol.22. பக்கம் : 141ன் எடுத்தாட்சி) ஆவணத்திலிருந்து மேலே எடுத்துக் காட்டப்பட்ட பகுதியில் உள்ளடங்கியிருக்கும் அக்காதுவழிச் செய்தி, கரிகால்ன்,