பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்பு 17 தமிழ்ச்சொற்களிலும், எண்ணற்ற சான்றுகள் காணக்கூடிய, பிற்காலத் தமிழிலக்கியங்களில் எதிரொலிக்கக் கூடிய ஆரிய காலத்திற்கு முந்திய காலங்களில், இந்தியர்கள் அடைந்திருந்த மிகச் சிறந்த நாகரிகத்தை உணராமையாலும், தஸ்யூக்களில் நாகரிகம் பற்றிய வேதக்குறிப்புகளை மதியாமையாலும், நாகரிகமற்ற தஸ்யூக்கள் பற்றிய புராணக் கதைகளைக் கட்டி விட்டனர். ஆரியவர்த்த்த்தின் மரபு வழிப் புனிதத் தன்மையும், பழம் புராணக் கதைகளில் நிறையக் கிடைக்கும், இராக்கதர்களின் கொடுமைகளை மிகைப்படுத்திக் கூறும் கதைகளும், இத்தவறான கூற்றை உறுதி செய்யத் துணைபுரிந்தன. தஸ்யூக்கள் பற்றி இருடிகள் பேசும்போது, அவர்கள், அவர்களின் பகைவர் குறித்தும் பேசுகின்றனர், என்பதை நினைவில் கொண்டு உண்மையைக் கடும்வெறுப்புக் காரணமாக மிகைப்படுத்திக்கூறும் கூற்றிலிருந்து கழித்தே பார்க்க வேண்டும். வேத மந்திரங்களிலும், வீரகாவியங் களிலும், புராணக் கட்டுக்கதைகளிலும், தஸ்யூக்கள், ராrதர் களின் காட்டுமிராண்டித் தனம் பற்றிய பழிப்புரைகளுக்கு இடையிடையே, அவர்களுடைய உயர்ந்த நாகரிகம், கோட்டை நிகர் மாளிகைகள், பொன் அணிகள், செல்வ வளங்கள், மற்றும் பிற நலங்கள் பற்றிய, ஏராளமான பகுதி களும் உள்ளன என்பதையும் நாம் மறத்தல் கூடாது. ஆகி, அத்தஸ்யூக்கள் நாடு கடத்தப்பட்ட ஆரியர்களாலும், அவ்வப்போது வந்துசேரும் ஒரு சில ஆரிய வந்தேறிகளாலும், நாகரிகம் பெறக் காத்திருந்த நாகரிகம் கல்லாப் பழங்குடி யினர் அல்லர். r . தக்கண நாடு, வடநாட்டிலிருந்து கட்டுறுதியாகப் பிரிவுண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது; பழங்கால ஆரிய அரசர்கள் வேதமந்திர இருடிகள் வளமுற வாழ்ந்திருந்த காலத்தில், அதாவது, இக்கூடிவாகு காலம்முதல், மகாபாரதப் போர்வரை (என்னுடைய, பழைய இலக்கியக் காலவரிசைப் படி, கி. மு. 3000 முதல் 1400 வரை) விந்தியத்திற்கு வடக்கில் உள்ள நாடுகள் வரையிலேயே, தங்கள் நாட்டாசைகளை அடக்கிக் கொண்டனர் என்ற தப்பான முடிவுகளை,