பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தமிழர் வரலாறு அய்யங்கார் அவர்கள், திரு. சேஷகிரி சாஸ்திரியார், திரு. குமாரசாமி ஆகியோர் சித்தாந்தங்களை ஒப்புக்கொண்டு, திரு. ஹல்ட்ஸ் அவர்களால் வேண்டப்பட்ட அகச்சான்றுகள் மூலம், இரு கஜபாகுகளையும் அடையாளம் காட்ட முயன்றுள்ளார். "சிலப்பதிகாரக் காப்பியத்து முதல் காண்டத்தின் கருத்தோடு மேற்கொள்ளப்படும் திறனாய்வு, பாட்டுடைத்தலைவன் வாழ்க்கையின் தொடக்க காலத்தில், புகார் அதாவது, காவிரிப்பூம்பட்டினத்து அரசன், கரிகாற்சோழன் என்பதை உணர்த்தும், ஆளும் அரசன் பற்றிய குறிப்பீடுகள் அனைத்தையும், உரையாசிரியர், கரிகாலனுக்கே பொருந்துமாறு ஒரே நிலையினதாகப் பொருள் கண்டுள்ளார் என்ற உண்மை ஒருபுறம் இருக்க, (எடுத்துக்கொண்ட பணிக்கு முழுவதும் தகுதி வாய்ந்தவர் உரையாசிரியர். ஆகவே, தம்முடைய உரையில், உண்மையான காதுவழிச் செய்தியைத் தவிர்த்து, வேறு எதையும், ஆண்டிருக்க மாட்டார் என எதிர்பாக்கலாம். ஆதலால், இது ஒன்றே போதுமானதாகும்). பெயர் மூலமாகவும், இமயத்தின் மீது புலிச் சின்னத்தை நாட்டியது அவனுக்கே உரித்தாகும் உண்மை மூலமாகவும் அவனைக் குறிக்கும் எண்ணற்ற, நேரிடைக் குறிப்பீடுகளும் உள்ளன" எனக் கூறுகிறார் (Ancient India. Page:350) a sorumāīluff. -pjuïrib oróðisir கழித்து உரை செய்துள்ளார் என ஏற்கெனவே கூறியுள்ளேன். ஒரு கதை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கைம்மாறி வருவதே காதுவழிச் செய்தி என்பதன் பொருள். உரையாசிரியரின் விளக்கங்கள், அவருடைய கண்டு பிடிப்புக்கள் ஆகா மாறாகப் பழைய உரையாசிரியர் தலை முறைகளிலிருந்து, இடையறவு படாமல், வரிசையாகக் கைம்மாறிக் கைம்மாறி வந்தனவே என்பதை உணர்த்தும் சான்று எதுவும் இல்லை. ஆகவே, அவருடைய கற்பனைகள் எல்லாம் காதுவழிச் செய்திகள் ஆகிவிடா. உரையாசிரியர், சிறந்த தமிழ்ப்புலவர், பொருள் விளங்காப் பகுதிகளுக்கு விளக்கம் அளிக்கும் தகுதி வாய்ந்தவர்; அதில் ஐயம் இல்லை: ஆனால், அதுவே, மேலே எடுத்தாண்டிருக்கும் எடுத்துக் காட்டின் அடைப்புகளுக்கிடையில் கூறப்பட்டிருக்கும்