பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் . 265 தலைநாட் போலவே, இவ்விழாவின் இறுதிக் கண் புனலாடிடங்களும் வீறுபெறத் தோன்றா நிற்க". (சிலம்பு : காதை :-6 வரிகள் : 159 - 160. அடியார்க்கு நல்லார் உரை) அது நிகழ்ந்த காலத்தில் கரிகாலன் ஆண்டுகொண்டிருந்தான் எனக் கூறுவதற்குப் பதிலாக, இது, கரிகாலனுடைய புனலாட்டுவிழா, அப்பாட்டில் கூறப்படும் புனலாட்டு விழாவிற்குக் காலத்தால் முற்பட்டது என்ற பொருளையே உணர்த்துகிறது. 3) "குறிப்பு மொழிகளால் (மறைமுகமாக) உணர்த்துதலைக் குறிப்பிடத் தேவை இல்லை : காதை", வரிகள் 95-8-இல், அப்பாட்டுடைத் தலைவனைப் பற்றிய, ஐயத்திற்கிடமில்லாக் குறிப்பே உளது". - "அசைவில் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் பகைவிலக் கியது.இப் பயங்கெழு மலையென இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோன்". இவ்வரிகளை எடுத்தாண்டு மொழி பெயர்த்தும் உள்ளேன். அது, இந்திரவிழா ஊர்வலத்தின் போது, பண்டொரு காலத்தில் கரிகாலனால் பெறப்பட்ட சில பொருட்களுக்குப் பலி தூவி விழா செய்யப்பட்டது என்று மட்டுமே குறிப்பிட்டு, அப்பொருட்களை, அவன் கைக் கொண்டது, பாட்டு கூறும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் ஆகும் என்பதையே உறுதி செய்கிறது. அடிக்குறிப்பு : (புலவர் ஆண்டிருக்கும் உண்மையான "புண்ணிய திசை முகம் போகிய அந்நாள்" என்ற தொடர் அப்பாட்டு கூறும் நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முற்பட்ட காலத்தே வாழ்ந்த ஓர் அரசனாவன் அவன் என்ற பொருளை உணர்த்துகிறது). 6) "17 ஆம் காதையில் மூவேந்தர்களைப் பாராட்டும் பாக்களில், ஒரு பாட்டில் கரிகாலனின் இமய வெற்றி குறிப்பிடப்பட்டுளது. குறிப்பிடப்பட்ட அவன், கடைசிக் சோழனாவன்."