பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழர் வரலாறு கான மாதிரிப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிந்துவெளிப் பழம்பெரும் நாகரிகத்தை விளக்க வல்ல நினைவுச் சின்னப் பழம் பொருள்கள், போதிய அளவு அகழ்ந்து எடுக்கப்பட்டன. "வெட்டுக் குழிகள் செம் பொடுகள் இணைந்த கட்டுமான காலத்தைச் சேர்ந்த, இடையீடின்றித் தொடர்ந்த பல அடுக்குக் கட்டிடங்கள் இருந்ததை வெளிப்படுத்துகின்றன". கரடு முரடான திருந்தா வேலைப்பாடும், தொன்மையை வெளிப்படுத்தும் தோற்றமும் வாய்ந்த சில உருவங்கள் மொகஞ்சோ-தரோவில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், "எடுப்பான மூக்கு, கண் களுக்குக் களிமண்ணாலான தட்டிய சிறுகுண்டுகளைப் பொருத்துவது ஆகிய இவை, மெஸ்படோமியாவில் மிகப் பழைய காலத்தைச் சேர்ந்த இவைபோலும் உருவங்களின் தனிச்சிறப்பு ஆகும்" சிந்துவெளிப் பழம் நாகரிகத்தின் வடிகாலே, சுமேரிய நாகரீகம் என்பதற்கான தெளிவான அகச் சான்றுகளாம். இக்கண்டுபிடிப்புகளே அல்லாமல் இவை போலும் பல கண்டுபிடிப்புகள் மொகஞ்சோதரோவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள் முடிவாகப்படிக்கப்பட்டுப் பொருளுணரப்பட்டபோதே கிடைக்கும். - - பாபிலோனியாவுடன் பண்டை வாணிகம் : சிந்துவெளிப் பள்ளத்தாக்கிற்கும், சுமேரியாவுக்கும் இடையில் போக்குவரவுத் தொடர்பு இருந்திருக்குமேயானால், அதைவிடப் பெரிய அளவிலான போக்குவரத்துத் தொடர்பு இவ்விரு நாடுகளுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் இருந்திருக்க வேண்டும். இதற்கான அகச்சான்றுகள் திருவாளர் சாய்ஸி அவர்கள் குறிப்பிடும் இரு உண்மைகளில் காணப்படுகின்றன. ஒன்று, கி.மு. 4000 ஆண்டில், சுமேரிய மன்னர்களின் தலைமை இடமாம் ஊர் (முகையிர் நகரின் அழிபாடுகளில், இந்தியத் தேக்கு மரங்கள் காணப்பட்டன என்பது. மற்றொன்று, மெல்லிய ஆடையைக் குறிக்கும் "சிந்து" என்ற சொல், பழைய பாபிலோனியன், உடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது (Sayce: Hibbert