பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 - தமிழர் வரலாறு இருப்பதை இது விளக்கும். பல்லவர்கள், தமிழர்களாக ஆகிவிட்ட பின்னர்த், தமிழிலக்கியங்களில், அவர்களைப் பற்றிய குறிப்புகள் மிகப் பலவாம். பல்லவ குமார விஷ்ணு கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கைப்பற்றும் வரை, காஞ்சீபுரம், சோழப் பேரரசிக்கு அடங்கிய சிற்றரசாகவே இருந்து வந்தது. அவன் வழிவந்தவருள் ஒருவனான சிம்ம விஷ்ணு, சோழ நாட்டையும், தன் ஆட்சியோடு இணைத்துக் கொண்டான். அது, எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளின் எல்லைக்கு அப்பாற்பட்டதான மிகப் பெரிய வரலாற்று மாறுதலுக்கு வழிவகுத்துவிட்டது.