பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் - 333 புறநானூறு 173 ஆம் எண் பாட்டின் கொளு, "சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது" என்கிறது. பாட்டு கூறுவது இது :- "என் வாழ்நாளையும், தன் வாழ் நாளோடு கொண்டு பண்ணன் நெடிது வாழ்வானாக பாணர்காள் இப்பரிசிலனது சுற்றத்தின் வறுமைக் கொடுமையைக் காணுங்கள். புதிது புதிதாகப் பழங்களை ஈன்றிருக்கும் மரத்தின்கண், பறவைக் கூட்டம் எழுப்பும் பேரொலிபோலப் பண்ணன் அட்டிற் சாலையில் உணவு உண்பார் எழுப்பும் பேரொலியும், கேட்கத்தான் செய்கிறது. காலம் தப்பா மழை பெய்யும் காலத்தை எதிர்பார்த்திருந்து, தம்முட்டைகளைக் கவ்வி யவாறே மேட்டு நிலம் நோக்கி வரிசை வரிசையாகச் செல்லும் எறும்புக் கூட்டம்போலப் LGT6Tr அட்டிற். சாலையில் பெற்ற சோறு நிறைந்த தட்டேந்திய கையின்ராய், இளம் சிறார்கள், தங்கள் உறவினரோடு வரிசை வரிசையாகச் செல்வதையும் பார்க்கத்தான் செய்கிறோம். அதனால் பண்ணன் இல்லம் அணித்தாகிவிட்டது என்பதையும் அறிந்துள்ளோம். இருந்தும், பசிக் கொடுமையால், மனம் விதுப்புற, எதிர்ப்படுவாரையெல்லாம் அணுகி, பசி தீர்க்கும் மருந்துவனாம் பண்ணன் இல்லம், அண்மையில் உள்ளதா? இன்னமும் சேய்மைக்கண் உள்ளதா சொல்லுங்கள், சொல்லுங்கள்" எனக் கேட்கலாயினோம்" . . . . . . . . . . . "யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்கு, இவன் கடும்பினது இடும்பை: யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம் தானும் கேட்டும்: போய்யர் எழலி பெய்விடம் நோக்கி முட்டைகொண்டு வன்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் வீறு.iறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்கும்; கண்டும்: மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றெனட்