பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 387 பட்டுளது. ஒருவன் பிறந்த நாண்மீன் குறிப்பிடப்பட்டு, "நீ, நீடு வாழ்க!" என வாழ்த்துதற்கு மாறாக, "நீ பிறந்த நாண்மீன் நிலைமேலுடையதாக நிற்குமாக!" எனும் வாழ்த்தும் நிலைபற்றிய ஒரு குறிப்பும் உளது. "நின்று நிலைஇயர் நின் நாண்மீன்". புறம் : 24 : 24. இது, பெரும்பாலும், தென்னாட்டில் இடம் பெற்று விட்ட ஒர் ஆரிய முறையாகும். பொதுவாக, அமைப்பு முறையில், பாட்டினப்பாலை போன்றதான மதுரைக்காஞ்சி, முன்னது, காவிரிப்பூம் பட்டினத்தை விளக்கிக் கூறுவது போலவே, மதுரை மாநகர் அமைப்பை விரித்து உரைத்து, அந்நகரில் உள்ள இறைத்தன்மை வாய்ந்த இடங்களையும் குறிப்பிடுகிறது. மதுரையில் ஆகம வழிபாட்டு நெறிகள்: ஆகம வழிபாட்டு நெறிகள், மதுரை மாநகரில் விரைந்து பரவியதற்கான அகச்சான்றுகளை மதுரைக் காஞ்சியில் நாம், பெறுகிறோம். அப்பாட்டின் ஆசிரியர் இவ்வாறு விளக்கி யுள்ளார்: "நீர், நிலம், நெருப்பு, காற்று, நால்வேறு திசைகளைக் கொண்ட வான்வெளி ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் ஒருசேரப் படைத்த, மழுவாகிய வாட் படையுடைய பெரியோனாம் சிவனை முதல்வனாகக் கொண்டு, தெய்வத் தன்மையால், நிறைந்த ஒளியினையுடைய வாடாத மலர்களையும், இதழ்குவியாக் கண்களையும், அவியாகிய உணவினையும் உடைய, ஆக்கம் தரும் மாயோன், முருகன் முதலாம் தெய்வங்கட்டு, அகத்தும், புறத்தும் அழுக்கற்றுத் தூய்மையுடையராய், மாற்றுதற் கரிய இயல்பினதான உயர்ந்த பலிகளைக் கொடுத்து வழிபடுவதற்கு அந்திப் போதில், விழாக்குறித்து இசைக்கருவிகள் முழங்கும்." "நீரும், நிலனும், தீயும், வளியும் . மாக வீசும்போடு ஐந்து உடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக, மாசற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர் வாடாப்பூவின் இமையா நாட்டத்து, - t