பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 தமிழர் வரலாறு அரசவைப் புலவரின், மன்னிக்கலாம் மிகைபடக் கூறலாக் கொள்ளலாம். ஆனால், பலநூறு அண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்தவராய ஒர் உரையாசிரியர், அதைப் புகுத்துவராயின், அது, கட்டுப்பாடற்ற விளையாட்டுக் கற்பனையின் விளைவேயாகும். தமிழ் நாட்டின் மீது மெளரியர் படையெடுப்பு - ஒரு மற்றொன்று விரித்தல் : - சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்த், திருவாளர் மு. ராகவ அய்யங்கார் அவர்கள், அகநானூற்றிலிருந்து, அது, அந்நிலையிலும் அச்சிடப் படாத நிலையில், மோரியர் என்ற சொல் இடம் பெற்ற மூன்று பாடற்பகுதிகளைக் கண்டு வெளிப்படுத்தினார். அதில் முக்கியப் பகுதி, "வெற்றிக் கொடியினையும், காற்றுப்போல்விரையும், அழகுறப்புனையப் பட்ட தேரினையும் உடைய கோசர். மிகப் பழைய ஆலமரத்தின் அரிய கிளைகளின் கீழான மன்றத்தில், இனிய இசை எழுப்பவல்ல முரசம், குறுந்தடியால் அடிக்கப்பட்டு ஒலிக்கக், பகைவர் போர்முனையை அழித்தபோது, மோகூர் மன்னன் பணிந்து வாராமையால், அவன் பால் பகை கொண்டு வந்த, குதிரைப் படைகள் நிறைந்த பெரிய சேனையினையுடைய புதிய மோரியர் என்பார் புனையப் பெற்ற தம் தேர்களின் உருளைகள், தடையின்றி உருண்டோடுவதற்காக, உடைத்து வழி செய்யப்பட்ட, ஒளி வீகம் வெண்ணிற அருவிகளைக் கொண்ட மலையிடை வழி" எனக்கூறுகிறது. . - "வெல் கொடித் . துனைகால் அன்ன புனைதேர்க் கோசர், - தொன்முது ஆலத்து அரும்பனைப்பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத், தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப