பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 - - தமிழர் வரலாறு ஆங்குள்ள ஒரு பழைய வீட்டில் வாழ்ந்திருந்த போது, நல்ல தலைப்புகளில் அழகாக எழுதுவது போலும் சிறந்த பண்புகளால் புகழ் பெற்றிருந்தவனும், சிறந்த அறிவுடை யவனும், நல்லவனும் இரந்து உண்போனும் ஆகிய என்னால் இது எழுதப்பட்டு, விரிவாக விளக்க உரையும் செய்யப் பட்டது. "நர நாரீகனாகிண்ணெ அசங்கிண்ண குலாகுலெ பீ.தெ. சப்பன்க கம்பன்னெ பகன்ன சரிதுதகெ நாநாரதன சம்புண்னெ விவிதாபண சங்கதெ - காவெரீ பட்டனெ ரம்மெ நாநாராமொ, பசொப்ஹறிதெ கெலாச சிகராகார பாசாத பதி மண்டிதெ காரிதெ கண்ஹதாசென தஸ்ஸநீயெ மனொரமெ விகார விவிதாகாரசாரு பாகார கொபுரெ தத பாசீன பாச்ாதெ மயா திவசதா சதா ரம்ம கல்லெக சாகல்ய சிலதி குண சொப்ஹினா சுயம் சுமதினா சாது யாசிதென கதொ ததொ", அபிதம்மாவதாரம் : சுலோகம் : 1409 - 1413. வாழ்த்துப் பாக்களின் முடிவில், பிற்கால் எழுத்தாளர் சிலர், "அபிதம்மாவுதாரம் என்ற இந்நூல், உரகபுரத்தில் (உறையூரில்) வாழ்ந்திருந்த பஹ்தந்த புத்ததத்த ஆச்சாரியரால் இயற்றப்பட்டது" என்ற பின்னுரையின்ை இணைத்துள்ளனர். (உரகபுர நிவாசிகென ஆசிரியென ப்ஹதந்த புத்ததத்தென கதொ அவிதம்மாவதொரொ, நாமாயம்" உரகபுரத்தில் வாழ்வோன் என்பதன் பொருள் பெரும்பாலும் அந்நகரின் குடிமகன் என்பதே ஆம் . . . விநய விநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில், புத்த தத்தர் இவ்வாறு கூறுகிறார், "அனைத்துவகை மக்களைக் கொண்டதும், சோழப் பேரரசின் கடற்றுறை நகரானதும், வாழைத் தோட்டங்களாலும், பனை தென்னைத் தோப்புகளாலும் நிறைந்ததும், தாமரை, அல்லி மலர்களால்