486 - தமிழர் வரலாறு மூவேந்தர்களும், களப்பாளரைத் தமிழிலேயே பாடிப் பராட்டியுள்ளமையால் உறுதிப்படுவதால், களப்பாளர்கள், தமிழ்க் குறுநிலத் தலைவர்களே ஆவர். அவர்கள், ஆரிய சமயங்களைப் பேணிப்புரத்தமையால், அவர்கள், அறவே ஆரிய மயமாக்கப் பட்டுவிட்டனர். தமிழ் நாகரிகத்தைப் பல நூறு ஆண்டுகாலமாகச் சுற்றிவளைத்துக் கிடந்த, ஆரிய நாகரிகம், பழையதமிழ் மரபுகளைப் பேணிக்காத்துவந்த, பழந்தமிழ் அரச இனம் மூன்றும், அச்சுதன் ஆற்றலின் முன் நிலைகுலைந்து போன அந்நாள் தொட்டுத் தமிழர் சிந்தனைச் செல்வங்களை வியத்தகுநிலையில் கைப்பற்றிக் கொண்டது. - களப்பிரர், கள்ளரா? திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், களப்பிரர், பழந்தமிழ்ப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் கள்ளர் ஆவர் என்ற கொள்கைக்குத்துணை செய்கிறார். "கள்ளர்" என்பதற்குக் "கள்வர்” என்ற மாற்றுவடிவம் உண்டு; “களவர்" என்பது, பழைய ஓலைச்சுவரிகளில் “ள" என்பதன் கண் உள்ள புள்ளி இடப்பெறாமல் “களவர்” என ஆதலும் உண்டு. "களவர்" என்ற அது, "களபர்" "களபா" "களப்ஹர" என்றும் இறுதியாக "களப்ஹ்ர" என ஆகும். ஆனால், “களப்ஹ" என்ற சொல் பாலிமொழியிலிருந்து கண்டு கொண்டோம் ஆதலின், இதற்குத் தமிழில் சொல்லாக்க விதிகளைத் தேடி அலையத்தேவையில்லை. அது மட்டும் அல்லாமல் பண்டைக் காலத்தில், கள்வர், குறுநிலத் தலைவர்களுக்கு மேலாவர் என்பதற்கான அகச்சான்று எதுவும் இல்லை. "கலப்பாளர்" என்ற சொல்குறித்து ஒரு வார்த்தை : மெய்கண்ட தேவரின் தந்தையார் அல்லாமல் மேலும் பல களப்பாளர்கள், தமிழ்இலக்கியங்களில் காண்ப்படுகின்றனர். நெடுமாறன் கிழான் என்ற ஒரு களப்பான அரசன், பதினாறு - ஆண்டுகளுக்கு முன்னர்த் தாம் கண்டு பிடித்த கல்வெட்டு ஒன்றிலிருந்து திரு. எஸ். சோமசுந்தர தேசிகர் அவர்களால், ம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளான். (செந்தமிழ்
பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/493
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை