பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் 47 திருமுருகாற்றுப் படையில் (233-34) உரைக்கப்பட்டிருக்கும் இரத்தத்தோடு கலந்த சோற்றிற்கு "குருதியோடு விரஇய துவெள்ளரிசி, சில்பலிச்செய்து" - பார்ப்பனர்கள் கொண்ட மாற்றுப் பொருள், செந்நிறம் ஊட்டிய சோற்று உருண்டை) இப்பழக்க வழக்கங்கள் பழைய ஆரிய வந்தேறிகள் மணந்து கொண்ட தஸ்யூக்களின் பெண்களால், ஆரிய விவாகச் சடங்குகளில் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும். தென்னிந்திய ஆரியர்களின் வாழ்க்கை நெறிச் சட்டங்களை வகுத்தளித்து வரும், பிற்காலச் சூத்ரகாரர்களில் ஒருவரும் ஆகிய ஆபஸ்தம்பர், "சூத்திரர்களும், பெண்டிரும் கொண்டிருக்கும், இவ்வறிவு அனைத்தும், கற்று முடித்துப் பெற்ற ஒன்று" எனக் கூறுமளவு, இவை போலும் மிகப் பழைய தஸ்யூ மணச்சடங்குகள், அத்துணைப் புனிதம் வாய்ந்தவை யாக மதிக்கப்பட்டன. (சானிஷ் டஹா யாவத்யா ஸ்த்ரீஸ-ஸுத்ரொஷ்ரக." (தரும் சாத்திரம்) தென்னிந்திய மகளிர், தங்களுடைய வடக்கத்திய உடன் பிறப்புகளுக்குத் தெரியாத பிறிதொரு வழக்கத்தையும்-சேலையைக் கால்களுக்கு இடையே நுழைத்துக் கட்டும், அதாவது கச்சம் கட்டும் வழக்கத்தைச் சமய நெறியாகவே கொண்டு பின்பற்றி வருகின்றனர். இது பிராமண இனத்து மகளிர் தவிர்த்து, வேறு இனத்து மகளிர்களால் பின்பற்றப் படுவதில்லை. ஆகவே, இஃது ஒரு தஸ்யூ வழக்கமன்று. உறுதியாக-தம்முடைய ஆரியக் கணவன்மார், கச்சத்திற்குச் சிறப்பான புனிதத் தனித்தன்மை சேர்த்திருப்பதால், அவர்களுடைய மனைவி மார், தொடக்க காலத்தில், மணமாகாத, மறுபிறவியினராகாத தஸ்யூ சகோதரி களிலிருந்து தங்களை வேறு பிரித்துக் காட்டக் கணவர் செய்ததையே செய்துகாட்ட இது வந்தது போலும். ஒர் அறிவார்ந்த விளக்கம் : - விசாகப் பட்டினம் ஜமீன் மேலாளர், திருவாளர். ஜெய்ப்பூர் ஜி. ராமதாஸ் பந்துலு என்பவர், இராவணன் வழிவந்தவர், திராவிடப் பழங்குடியினராவர் என்ற கொள்கையை எண்பிப்பதற்குத் தேவையான அகச்