பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படையாகக் கொண்டு மூல நூலை மொழியாக்கம் செய்தபோது, அதில் கண்ட சில செய்திகளைப் புலவர் அவர்கள் மறுத்தும் விளக்கியும் மூலுநூலுக்குப் பெருமை சேர்த்துள்ளார். சங்கப் பாடல்களில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு, அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட சோழ, சேர, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை இந்நூலில் அய்யங்கார் ஆங்கிலத்தில் தந்ததைத் தமிழில் புலவர் தந்துள்ளார். சங்கப் பாடல்கள் பலவற்றை ஆசிரியர் மேற்கோளாகக் காட்டி அவற்றுக்குச் சரியான விளக்கமும் தந்துள்ளார். - தமிழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் வெளிவருகின்றது. தமிழன்பர்கள் வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்களாக - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.