பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o4 - தமிழர் வரலாறு என்றாலும், அவற்றைக் குறிப்பிட்டவர் இராமர் காலத்து வால்மீகி அல்லர், அவருக்குப் பலநூறு ஆண்டுக் காலம் கழித்து வாழ்ந்த, வேறு ஒரு வால்மீகி ஆவர். ஆகவே, அவை இராமர் காலத்தைச் சேர்ந்தன ஆகா" எனத் தம் வாதத்தை வேறு கோணத்தில் எடுத்து வைத்து விடுவர். சீதையைத் தேடித் தென்னாடு செல்லும் வானரத் தலைவனுக்கு, அத்திக்கில் அவன் காணலாகும் இடங்களை நிரலே எடுத்துக் கூறும் சுக்ரீவன், காவிரிப் பேராற்றையடுத்து மலையக் குன்றின் முகட்டில் வீற்றிருக்கும் அகஸ்தியரைக் காண்பீர்கள் எனக் கூறியதாக, இராமயாணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவும், "இராமர் காலத்தில், அகஸ்தியர் காவிரிக்கரைப் பொதிகை மலையை அடையவில்லை. அவர் கோதாவரிக்கரை பஞ்சவடியிலேதான் நிலைகொண்டிருந்தார். அவரை, எப்படி இராவணன், சீதையை வான வீதி வழியே கொண்டு சென்று இலங்கையில் சிறை வைத்துவிட்டானோ, அதேபோல், பஞ்சவடியில் இருக்கும் அகஸ்தியரைப் பொதிகைக்குன்றின் முகட்டில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் நிகழ்ச்சி இராமர் காலத்து வால்மீகியார் செயல் அன்று, இராமர் காலத்து அகஸ்தியருக்குப் பின்னர், தென்னாட்டில் மேலும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டிலும் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டுவிட்ட வேறு ஒரு அகஸ்தியர் காலத்துப் பாவலன் யாரோ ஒருவனால் துழைத்துவிடப்பட்ட இடைச்செருகலாம்". என்று கூறிவிடுவார் திருவாளர். பி. டி. எஸ். அவர்கள். (Agastyas assamam during the whole period of the wanderings of Rama was two yojanas from Panchavadi, yet, when Sugriva, sent his vanaras to the South to search for Sita, he told them, that they would see Kaveri's stream whose waters were holy, benign and bright; Nearby they would see seated on the top of Malaya Hill, brilliant as the sun Agastya, the excellent Rishi. Here we see Agastya spirited away by the poet, as Sita was by Ravana, from Panchavadi, and dropped on the top of the Malaya Hill, Hence this must have been inserted by the later poet who lived after the Agastyas had proceded further South than the Agastya of Rama's time and