பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழர் வரலாறு

22:455:1893 பாண்டிய அரசன் துரோணர்க்கு எதிராகப் போரிட்டு, அசுவத்தாமனால் கொல்லப்பட்டான் (மகாபாரதம்:4:23: 1019 : 8 : 21 : 81]

புதிதாக மணம் கொண்ட பாண்டவர்களின் மனைவி, திரெளபதி, யுதிஷ்டிரர் தொடங்கி, ஆண்டுக்கு ஒருவரோடு வாழவேண்டும் என்ற முறை ஏற்பட்டவுடனே, அர்ஜுனன் தீர்த்தயாத் திரை மேற்கொண்டான். அத் தீர்த்தயாத்திரையின் போது, மணிபுர மன்னன் சித்ரவாகனன் மகள், சித்ராங்கதாவை மணம் செய்து கொண்டான். [மகாபாரதம்: 7:11:3986. 1:215:7826.] மணி என்ற சொல், தமிழில் நீலமணியைக் குறிக்கும். பழைய சமஸ்கிருத இலக்கியங்களும், பழைய கரலவேலக் கல்வெட்டுகளும், பாண்டிய நாட்டு நீலமணியைப் பேசக் கேட்டுள்ளோம். ஆகவே, மணிப்பூர் என்ற பெயர், அம்மணி கிடைக்கும் பாண்டியர் தலைநகர்க்குப் பொருந்திய பெயரே]. அப்பெருங்காப்பியத்தின் தென் இந்தியப் பதிப்புகளில், அப்பெயர் “மணலூர்” எனக் குறிப்பிடப்பட்டுளது. ஆக, மணலுTர் என்பது உண்மையில் தமிழ்ப் பெயரே. பிறிதோர் இடத்தில் (ஆதிபர்வம்:6:1:64.) அர்ச்சுனனின் இம்மனைவி பாண்டவ அரசகுமாரியாகக் கூறப்பட்டுளது. சித்ராங்கதாவை மணம் செய்துகொள்ளுமுன், அர்ச்சுனன், உலூபி என்ற நாகக் கன்னிகையை மணந்து கொண்டான். (மகாபாரதம்: 1:214:7810) தன்னுடைய தீர்த்த யாத்திரையின் போது, அர்ச்சுனன் சென்ற இடங்கள், சீதையைத் தேடிவருமாறு தன் வானர வீரர்களைச் சுக்கீரீவன், பெரிய குழப்ப நிலையில் பணித்தது போன்ற குழப்பநிலையில், நிலவியல் சார்ந்த நிலைமைகளுக்கு மதிப்பளிக்காமலே குறிப்பிடப்பட்டுள்ளன. அவன் மணந்துகொண்ட உலூபி, கங்கைக் கரையில் அர்ச்சுனன் முன் திடுமென வந்து நிற்குமாறு செய்யப்பட்டாலும், அவள் பாண்டி நாட்டிற்கு அணித்தாக உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவளே ஆவள்.