பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வடஇந்தியாவும் ... கி. மு. 1000 ... 500 வரை

193

பிற்காலக் கற்பபை என்றும் எண்ணுகின்றேன். இது போலும் பேரழிவு சார்ந்த நிக்ழ்ச்சிக்கான சிறுகுறிப்புதானும் புராணங்களிலோ, அல்லது மரபு வழிச்செய்திகளிலோ காணப் படவில்லை. ஆகவே, கிருஷ்ண யஜுர் வேதம், தஷிண பிராமணர்களின் 'சாகா'வாக ஆதற்குப் போதுமான போக்குவரத்து, கி. மு. 14. கி. மு. 13 நூற்றாண்டு காலத்தில், தென்னிந்தியாவுக்கும், வடஇந்தியாவுக்கும் இடையில் இருந்துவந்தது. இச்சமய நெறிக்கான விதிமுறைகளை, முதன்முதலில் வகுத்த ஒருவர், பெளதாயனர் ஆதலின் அவரை, கி. மு. 900இல் கொண்டு நிறுத்த விரும்புகின்றேன்; இக்காலம், பாரத்தாயனார்க்குப் பொருத்தம் அற்ற பழங் - காலமாகத் தோன்றக் கூடும், ஆனால், கோதாவரி ஆற்றங்கரையில், இராமர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியர் இருந்து வந்தனர் என்பதையும், தென்னிந்தியாவை, இராமன் அமைதி நிலவும் இடமாக மாற்றியது, ஆங்கு ஆரியர்கள் மேலும் பரவுவதற்கு வழிசெய்தது என்பதையும், வேதவியாசர் மற்றும் வைசம்பாயனர் காலத்தில், கிருஷ்ண யஜுர் வேத மாணவர்கள், அந்த ஆற்றை அடுத் திருந்த மாவட்டங்களுக்கு உள்ளாகவே இருந்தனர் என்பதையும், அச் சாகாவின், முது பெரும் சூத்ரகாரர் பெளதாயனர் ஆவர் என்பதையும் நினைவில் கொண்டால், மேலும், பாணினி கி. மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதையும், ஆபஸ்தம்பர், பாணினியின் சமகாலத்தவர் அல்லது சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பதையும், பெளதாயனர், ஆபஸ்த்ம்பரை விட, குறைந்தது இரண்டு நூற்றாண்டுகாலம் முற்பட்டவர் என்பதையும் ஏற்றுக்கொண்டால், பெளதாயனர் காலம் பற்றிய என்னுடைய மதிப்பீடு எவ்வாறு மறுக்கப்படும் என்பதைக் காணமுடியவில்லை. ஆனால், பெளதாயனர், அத்துணைப் பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும், அவர் பெயரால் வழங்கப்படும் சூத்திரங்களுக்கு அப்பழங்காலத்தைக் கொடுக்க இயலாது ; ஆபஸ்தம்பரின் சூத்திரங்களைப் போல் அல்லாமல், பெளதாயரின் சூத்திரங்கள், அவரைப் பின்பற்றுவோர்களில், மிக மிகப் பிற்பட்ட காலத்தவரால், த வ.-18 - -