பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழர் வரலாறு

யதைக் கல்வெட்டில் பொறித்து இருப்பான். ஆனால், இச் செய்தியை மகாவம்சந்தான் நமக்கு அறிவிக்கிறது. அசோகன், தூதுவர்களை, தர்ம விஜயத்திற்கே அனுப்பினனாக, பல்வேறு. நாடுகளுக்குப் புத்த சமயப் பிரசாரகர்களை, மூன்றாவது, புத்தப்பேரவை தான் அனுப்பியது. அசோகன், பிராமண, இல்லறத்தார். துறவறத்தார், சமண முனிவர்களை மதித்தது. போலவே, பெளத்த முனிவர்களையும், மதித்தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இது பெளத்த சந்நியாசிகளைச் சமயப் பிரசாரகர்களாக அனுப்பியதாகப் பொருளாகாது. இப்பொருள் குறித்தவரை, பெளத்த வரலாற்று அட்டவணையாகிய மகாவம்சம், ஒருதலைப்பட்ட சான்றே ஆகும். ஆனால், நம்முடைய ஆய்வு அப்பொருள் பற்றியதன்று. அசோகன் கல்வெட்டுக்களிலிருந்து, அசோகன் காலத்தில், அவனுடைய முந்தையோர் காலத்தைப் போலவே, தமிழ்நாடு, வட இந்தியாவோடு சுறுசுறுப்பான மிகப் பெரிய போக்குவரவினைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்வது ஒன்றே போதும்.

இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர்கள், மெளரியப் பேரரசு பற்றியும், பிற்காலத்தே குப்தர்களில் முடியாட்சி: பற்றியும் பரவலாகப் பேசுகின்றனர். பேரரசு, பேரரசைச் சார்ந்த எனப் பொருள்படும் (Empire: Imperial) என்ற: இவ்வாங்கிலச்சொற்கள், பண்டைக்காலத்தில், இந்திய நாடுகள் ஒன்றோடொன்று கொண்டிருந்த அரசியல் உறவு பற்றி மிகப் பெரிய தவறான கருத்தினையே உணர்த்துகின்றன. இந்திய வரலாற்றில். இவ்வரலாற்றின் போக்கில், தவறான கொள்கையினை ஏற்படுத்தாமல், "எம்பயர்" (Empire) என்ற. சொல்லை ஆள்வது இயலாது. பேரரசு (Empire) என்ற அச் சொல் உணர்த்தும் உள்ளார்ந்த பொருள் அத்தகைத்து. தன். ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் அமைதி நிலைநாட்டல், உரோம் நாட்டுக் குடியுரிமை உரோம் நாட்டுச் சட்டம் ஒழுங்கு முறைகளை மெல்ல மெல்ல விரிவாக்கல், இலத்தின் மொழியைப் பரப்புதல் ஆகிய இவையே. உரோமப் பேரரசு, என்பதன் பொருளாம். சட்டம் ஒழுங்கு நிலையில் பிரித்