பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தமிழர் வரலாறு

‘’இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப, வாங்கி
நல்அரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊது உலைக் குருகின் உள்உயர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்என
வரைந்துவரல் இரக்குவ மாயின், நம்மலை
நன்னாள் வதுவை கூடி, நீடின்று
நம்மொடு செல்வர்மன் ; தோழி! மெல்ல
வேங்கைக் கண்ணியர், எருது ஏறி களமர்
நிலங்கண் டன்ன அகன்கண் பாசறை
மென்தினை நெடும்போர் புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும் தம் பெருங்கல் நாடே‘’

-நற்றிணை : 125

‘’பேயினங்கள் காற்றுப் போல விரைந்து இயங்கா நிற்க, ஊரினர் அனைவரும் உறக்கம் கொண்டுவிட்டனர். ஆனால், குறிஞ்சிப் பண்ணைக் கேட்போர் அச்சம் கொள்ளுமாறு பாடும், இவ்வூர்க் காவலராய கானவர் கண்துயில் கொண்டாரல்லர். வலிய ஆண்யானையோடு போரிட்ட, வாள் போல் வளைத்த கோடுகளையுடைய புலி, மலையடிவாரத்தே இருந்து முழங்கா நிற்கும். வானளாவ உயர்ந்து நிற்கும், மலைச்சரிவுகளில், விரைவில் விடியாது நீண்டு செல்லும் இரவின் ஒரு யாமத்தில், பாம்பும், தன் அழகிய நீலமணியைக் கக்கி வருந்துமாறு, பேரொளிகாட்டி மின்ன, பேரொலி எழ இடித்து மழை பெய்யா நின்றது. அந்தோ! முன்பே மெலிந்திருக்கும் என் தோள்கள் மேலும் மெலிவுற்று நாம் வருந்த நேரினும், அவர், அந்நள்ளிரவில் அக்கொடு வழியில் வாராதிருப்பராயின், அதுவே நனிமிக நன்றாம்".

‘’கழுது கால் கிளர, ஊர்மடிந் தன்றே;
உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக்