பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

தமிழர் வரலாறு

கோவை மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தமிழ் வைடூரியத்திலிருந்து 'பெரில்லோஸ்' (Beryllos) இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்து உரோமானியர், அவர்களுடைய, பண்டைய எளிய வாழ்க்கை முறையையே கடைப். பிடித்தனர். பகட்டு வாழ்க்கையில் அவா கொண்டிலர்: ஆகவே, நடுவர் இருவர் குழு (Conswlar) ஆட்சியின் தொடக்ககாலத்தில், இந்தியப் பண்டங்கள், உரோமாபுரியை அடையவில்லை. அந்நாட்களில், இந்தியா இறக்குமதி செய்தனவற்றில் உரோம நாணயம் இடம் பெறவில்லை. யாகவே, அக்காலை நடைபெற்ற சிறுவாணிகத்திலும், வாங்கிய பண்டங்கள், உரோம நாட்டுப் பணம் கொடுத்து வாங்கப்பட வில்லை. பல நூறு ஆண்டு காலமாக இருந்துவந்த பழைய தடத்திலேயே வாணிகம் நடைபெற்றிருக்கக் கூடும். நடை பெற்றிருந்தது. ஆனால், நடுவர் இருவர் குழு ஆட்சியின் பிற்பகுதிவரை, உரோம அரசு, கிழக்கு நோக்கி விரிவடையவில்லை. துணிவு மிக்க உரோம வணிகர்களுக்குப் பல்மைரா (Palmyra) தன்னுடைய கதவுகளைத் திறக்கவில்லை. ஜூலியஸ் சீசரால், அலெக்ஸாண்டிரியா, கி. மு. 47 இல், கைக் கொள்ளப்பட்டது என்றாலும், கடல் வாணிகம் அராபியப் படகுகளில், கடற்கொள்ளைக்காரர்களின் பி டி யி ல் சிக்குண்டிருந்த கடற்கரையை ஒட்டி நடைபெற்று வந்தமையால், அக்காலை வாணிகம், சிறிய அளவில், நிலையற்ற தன்மையிலேயே நடைபெற்றுவந்தது. அக்காலத்தில், ஐரோப்பாவுக்கு, இந்தியாவிலிருந்து, என்னென்ன ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவை. பெரும்பாலும் உரோமுக்குச் செல்வதில்லை. கிரேக்கத்திற்கே சென்றன. (J. R. A. S: 1904. page : 593 - 94. Sewell]] திருவாளர் ஸ்வெல் அவர்களின், இந்த முடிவுகள், உரோம் நாட்டு நடுவர் இருவர் குழு ஆட்சிக்காலத்து நாணயங்களில், இதுவரை ஒருசில: நாணயங்களே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன என்ற உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவாம்.