பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

9


ஈண்டு ஆராயத் தேவையில்லை. ஆனால் அவ்வேதகாலம், ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக்கொண்டதாக மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் ஏறத்தாழ கி. மு. 3000ல் தொடங்கியதாகவும், நான் கருதுகிறேன் எனக் கூறுகின்ற அளவோடு நிறைவு கொள்கிறேன். ஸ்ரீஇராமச்சந்திரன், வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியின் இறுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி. மு. 2000 எனக் கருதுகின்றேன். இராமச்சந்திரன் பிறக்கும்போது ஐந்து விண்மீன்கள், மேலாட்சி நிலையில் இருந்தன என்ற செவிவழிச் செய்தியால் உறுதி செய்யப்படுகிறது என்ற சிறப்பும், இந்த நாளுக்கு உண்டு. ஸ்ரீஇராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இம் மதிப்பீடு ஸ்ரீகிருஷ்ணனின் இறப்போடும், வேத மந்திரங்களை இயற்றிவந்த நீண்ட வழிமுறையினரின் மறைவுகளோடும் ஒன்றுபட்ட, கலியுகத்தின் மரபு வழித் தொடக்கமாம், வேதகால முடிவுக்கு, நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. பாரதப்போருக்குப் பின்னர், இந்தியாவின், ஆண்டுவழி நிகழ்ச்சிநிரல் பட்டியல், இன்றியமையாநிலையில் சரியானதல்லவாகலாம் என்றாலும், எளிமையானது. ஆனால், நாம் பெரிதும் கருத்தில் கொள்ளவேண்டுவது நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை ஆராய்ந்து காணமுயல்வதே நம்பிக்கை யற்றதாகிவிட்டதான நிகழ்ச்சிகளின் சரியான நாட்களை அன்று.

தென்னிந்திய வரலாற்றுத் தேதிகளைப் பொறுத்த வரை இவைபோலும், தெளிவிலாக் கற்பனை முடிவுகளும், எட்டுவதற்கு அப்பாற்பட்டே உள்ளன. திருவாளர் கனகசபை அவர்கள் வரலாற்று மனிதர் சிலரின், ஏற்றுக்கொள்ளத் தக்க தேதிகளைக் கண்டுகொள்ளலாம் எனக் கற்பனை செய்துள்ளார். அது, வெறும் மாயை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. எந்தக்காலத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த, ஒரு சில வரலாற்றுத் தேதிகளைப்பெற, சில கல்வெட்டுக்கள் நமக்குத் துணைபுரிந்தனவோ, அந்தக் காலமாம் கி.பி. 600ஐ