பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

தமிழர் வரலாறு

பாஸா (Bhasa) என்பவர்தாம், சமஸ்கிருதப் புலவர்களில் பழமையானவர். அவர், கி. மு. மூன்றாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராவது இயலாது! அந்நாடக மரபைத், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தில் இணைத்துக்கொள்வதற்குத் துணை செய்வதற்கேற்பத், தென்னிந்தியாவை அடைய, சமஸ்கிருத நாடகங்களின், அவ்விலக்கிய மரபு, சில ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சொல், யாப்பு உள்ளிட்ட அதன் இலக்கணங்களுக்கு ஆற்றிய முழு நிறைவான அடிப்படைப்பணியுட்பட, தமிழ் நாகரீக வளர்ச்சிக்கு, அகத்தியர் பங்கு, கூறிப் பாராட்டத்தக்க பெருஞ்செயலாகும். ஆனால், பண்டைய கட்டுக் கதையாளர்களும், இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும். அற்புதத் திருவிளையாடல்களைக் கற்பித்து, அத்தூயவரை மாசுபடுத்த முயன்றுள்ளனர். அவ்வகையில், பழைய தமிழ்ப்புராணங்கள், அவர், சிவன் அல்லது சுப்பிரமணியரிடம் தமிழ் கற்றார்; தமிழர்களுக்குத் தமிழைக் கற்பித்தார் என்று கூறுகின்றன; அகத்தியர் தம்மிடையே வந்து, காட்சிதரும் வரை தமிழர், எழுத்தறிவில்லா ஊமையராய் இருந்தனர்! என நான் கருதுகின்றேன். திருவாளர் டி. ஆர். பண்டர்கார் அவர்கள், “அதுவரைக் கண்டறியப்படாதிருந்த தென்னாட்டினுள், திராவிடர்களை நாகரீக மக்களாக மாற்றியவாறே, மேலும் மேலும் ஊடுருவிச்சென்றார்.” எனக்கூறுகிறார்.(Carmichal Lecturas. 1918 Page 18) திருவாளர். டி. ஆர். இராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள், தமிழர்களின் சமுதாய இலக்கிய வாழ்க்கை முறையில், அகத்தியர் புகுத்திய புதுமை, வகுத்த மறுசீரமைப்புகள் பற்றிப் பேசுகிறார். (Proceedings and Transactions of Third Oriental Conference 1924 Page. 205) இவையனைத்தும் வடிகட்டிய சமயச் சார்பான கட்டுக்கதைகள். மக்கள் வாழ்ந்து வளர்ந்த சுற்றுச் சூழலை அடிப்படையாகக் கொண்டே எழுந்தமையால், மாற்றவோ, அழிக்கவோ முடியாததான, தமக்கே உரிய