பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழர் வரலாறு

அடையும்வரை, அதிகபட்சம், நாம்பெறக்கூடியது தெளிவில்லாத சில நிகழ்ச்சிகளின் வரிசைப்பட்டியல்தான்.

படி எடுத்தல் :

சமஸ்கிருதச் சொற்களை, உரோமன் எழுத்து வடிவில் எழுதியது, பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் கடைப் பிடித்த அதே முறைதான். தமிழ்ச்சொற்களுக்காக மேலும் சில எழுத்துக்களை மேற்கொண்டுள்ளேன். அவையாவன : ஃற்கு H; ஏவுக்கு E; ஓவுக்கு 0; றகர மெய்க்கு r; ழகர இன்றைய ஒலிப்பு நகரத்திற்கு முறையில் னகரத்தை வேறு பிரித்துக்காண முடியவில்லையாகவே னகரத்திற்குத் தனிக்குறியீடு எதையும் பயன்படுத்தவில்லை. தமிழை உரோமன் எழுத்தில் எழுதுவது, தனிச்சிக்கலைத் தோற்று விக்கிறது. தமிழ்நெடுங்கணக்கில் பல மெய்யெழுத்துக்களைக் குறிக்கவரும் குறியீடுகள் இரண்டு ஒலிகளைக் குறிக்கும் பணியினைப் புரிகின்றன. உரோமன் எழுத்தில் எழுதுவது ஒலிப்புமுறையோடு வேறுபட்டதாகிவிடின் அச்சொல் தன் பொருளையே இழந்துவிடுகிறது. ஆகவே தமிழ்ச்சொற்களின் ஒலிப்பு முறையினை உரோமன் எழுத்தில் அளித்துள்ளேன். நான் மேற்கொண்ட ஒலிப்புமுறை பெரிதும் சரியான ஒன்று, ஒவ்வொரு தமிழனும் அதைப் பின்பற்றலாம் அல்லது உணர்ந்துகொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். நான் சந்திக்கநேர்ந்த மற்றொரு சிக்கல், ஒரே சொல் சமஸ்கிருத வடிவிலும், தமிழ்வடிவிலும் காணப்படும்போது அதை எழுத்து வடிவில் தரும் நிலையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு விடுகிறது என்ற உண்மை நிலையாகும். சூழ்நிலை, ஒருவரை சமஸ்கிருதத்தில் சிந்திக்கவைக்கும்போது, இவை போலும் சொற்களைச் சமஸ்கிருத எழுத்துக்களிலும், தமிழில் சிந்திக்க வைக்கும்போது, தமிழ் எழுத்துக்களிலும் தந்துள்ளேன்: இம்முறை, அவ்விருமொழிகளில், ஒருமொழியைத் தெரியாத வாசகர்களைத் தடுமாறச் செய்யக்கூடும் என்றாலும் இம் முரண்பாட்டு நிலையைத் தவிர்த்துவிடல் கூடும் என நான் நினைக்கவில்லை.