பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... 413 ஆண்டுகள் படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும் மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந! பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, பெருமலை விடரகம் சிலம்ப முன்னிப், பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப் பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் நசைதர வந்து, நின் இசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ?” -(புறம் : 209 : 1-12) ஒரு தொழில் நடைபெறும் நிலத்தின் பொதுவான குறிக்கோள்களும், மிகமிக எளிய நிகழ்ச்சிகளும், தமிழ்நாட்டுப் புலவர்களிடமிருந்து, அப்புலவர்கள், பிற்காலச் சமஸ்கிருத இலக்கியக் கற்பனைப் பாடல்களின் செல்வாக்கின் அழுத்தமான பிடியுள் சிக்கிக்கொள்வதற்கு முன்னர், நனிமிக இனிய பாடல்களைப் பெற்றிருந்தன. இவ்வாறு பாடுகிறது:ஒரு பாட்டு:

"மடை அடைத்திருந்த, பல்லாற்றானும் மாண்புற்ற குளத்து நீர், மடைதிறந்துவிட்ட வழி, அக்குளத்தினின்றும்,அந்நீரோடு புறம் போந்து, கால்வாயை அடைந்து, சென்று.திரும்பிய, பெரிய கொம்பினையுடைய வாளைமீன், அக்கால் வாயிலிருந்து, சேறுபட்டுக் கிடக்கும் வயலுள் புகுந்து ஓடி, ஆங்கு உழுதுகொண்டிருக்கும் எருமைக் கடாக்களின் காற்சேறுபட்ட புள்ளிகளையுடைய மேற்புறத்தோடு, நிலத்தைச் சேறுபட மாறிமாறி உழும் உழவர்களின் கைக் கோலுக்கும் அஞ்சாது செருக்குற்று, சேற்றின்மேல் வரப்பு ஒரமாகவே ஓடி, மேற்கொண்டு போகமாட்டாது தடையுற்றுப் போய், அவ்வரப்படியிலேயே புரளத் தொடங்கும்",

"மாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக், கால் அணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை,