பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

தமிழர் வரலாறு

அழிக்கவரும் சிறிய கண்களை உடைய பன்றியின் பெருங் கூட்டத்தை விரட்டுவான் வேண்டி, அத்தினைப் புனத்தைக் காத்துகிடப்பார், அவை வருவது அறிந்து ஊதும், பெரிய கொம்பின் ஓசையொடு கலந்து வந்து ஒலிக்கும் முல்லைக் காட்டின் இடையே உள்ள நாடு".

"தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவையிலை முசுண்டை வெண் பூக் குழைய வான்எனப் பூத்த பானாள் கங்குல், மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன் தண்கமழ் முல்லை, தோன்றியொடு விரைஇ வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன், ஐதுபடு கொள்ளி அங்கை காயக் குறுநரி உளம்பும் கூர் இருள் நெடுவிளி, சிறு தனி பன்றிப் பெருநிரை கடிய முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் கருங்கோட்டு ஒசையொடு ஒருங்குவந்து இசைக்கும்".

            -அகம் : 94 : 1 - 11

"வட்டவட்டக் கண்களையும் கூரிய வாயலகையும் உடைய பெண் காக்கை, இளமையால் நடுங்கும் இறகுகளையுடைய தன் குஞ்சுகளை அனைத்தவாறே தன் இனக்காக்கை களையும் கூவி அழைத்து, குறுகிய கால்களை நட்டுக் கட்டப் பெற்று, உணவுப் பொருட்களை நிறையச் சேர்த்து வைத்திருக்கும் மனைகளின் முன்புறத்தில் இட்டுவைத்திருக்கும், கருணைக் கிழங்கின் பொரிக்கறியொடு கலந்த, செந்நெல் அரிசியாலான வெண்சோற்றுத்திரளைத் தெய்வங்களுக்கு இடும் பலியொடு கவர்ந்து உண்ணக் கூடியிருக்கும்".

'கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை, ஒருங்கு சிறைப் பிள்ளை தழிஇக் கிளை பயிர்ந்து கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு