பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் வாழ்க்கை கி. பி. . ஆண்டுகள் 425 குருடைப் பலியொடு கவரிய, குறுங்கால் கூறுடை நன்மனை குழுவின இருக்கும்"

          -நற்றிணை : 367 :1-5

பொதுமக்களின் இவ்வாழ்க்கை விளக்கம் வறுமையில் வாடும் ஒரு வீட்டின் படப்பிடிப்போடு முடியும்: 'சோறு ஆக்குதல், அறவே மறந்து போனமையால், தேய்வுறாது. கட்டியது கட்டியபடியே கோடு உயர்ந்து நிற்கும் அடுப்பில், காளான்கள் பூத்துக் கிடக்க, உடலை வாட்டும் பசியால் வருந்திப், பால் வறண்டு போகவே, தோல் மெலிந்து, பால் வரும் துளையும் தூர்ந்து பயனற்றுப் போன முலையில் வாய் வைத்துச் சுவைக்குந்தோறும், பால் வாராமை கண்டு அழத் தொடங்கிவிடும் தன் மகவின் முகத்தைக் காணும்தொறும் நீரால் நிறைந்துவிடும் கண்களாகிவிடும் மனையோள்".

"ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இண்மையின் தோலொடு திரங்கி இல்லி துார்ந்த பொல்லா வறுமுலை. சுவைத்தோறு அழுஉம் தன் மகத்துமுகம் நோக்கி நீரொடு நிறைந்த சகிதழ் மழைக்கண்னன் - மனையோள்".

‌‌               -‌ பு‌றம் : 184 :1-7

சிறு தொழில்கள் : இக்கால அளவில், சிற்றுார்களில் இன்று காணப்படும் அத்தனைத் தொழில்களும் செயல்படவேண்டிய அளவுக்கு, வாழ்க்கைத் தரம் வெகு வாக முன்னேறிவிட்டது, இத்தொழில்கள், புலவர்களுக்கு நல்ல உவமைகளாக உதவலாயின, "இரும்பைப் பயன்படுத்திப் பல கருவிகளை வடித்துக் கொடுக்கும் கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும்பை விசைத்து அடிக்கும் சம்மட்டியின் அடிகளைத், தாங்கி உருக்குலைந்து போகாது நிற்கும் பட்டடைக்கல்லைப்,