பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. . ஆண்டுகள்

455

கொண்டுசெல், பாண! நின் தண்துறை ஊரனை; பாடு மனைப் பாடல் கூடாது, நீடுநிலைப் புரவியும் பூண்நிலை முனிகுவ! விர கில மொழியல்; யாம் வேட்டது இல்வழியே". - நற்றிணை : 380

போற்றா ஒழுக்கம் உடையராகிய பரத்தையரின் பிடிக்குள் அகப்பட்டுக்கொள்ளும் ஆடவர் செய்யும் தவறுகளுக்கு அளவே இராது என்பது நோக்கி, கணவரை ஏற்க மறுக்கும் மனைவியரின் பிடிவாதத்தின் நியாயத்தன்மை உணரப்படும் பரத்தையர் ஒழுக்கம் கொண்ட கணவனால் புறக்கணிக்கப்பட்டாள் ஒருத்திக்கு அவள் தோழி கூறுவது, இது ; "அன்னை போலும் அன்புடையாய் ! நறிய நெற்றியையுடைய அரிவையே காதில் குழை அணிந்து மார்பில் மாலை சூடி, கையில் தொடி அணிந்து விழாக்களத்தில் துணங்கை ஆடிக்கொண்டிருக்கும் தலைவனைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடலாம் என்று, என் அறியாமையால் ஆசைப்பட்டு, விழாக்களம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது, நம்மிடம் அயலான் போல் நடந்துகொள்ளும் அவன், நெடிய பெரிய தெருக்கோடியில், ஒரு வளைவான இடத்தில் வேறு ஒரு வழியாகத் திடுமென வந்து எதிர்ப்பட, அவனை, "மனையாளைப் பிரிந்து பரத்தையர் பின் திரியும் உன்னைக் கண்டித்துக் கேட்பார் யாரேனும் உளரோ? அல்லது ஒருவருமே இலரோ" என்று நான் கேட்க, அவன் அது பற்றி ஏதும் கருதாதான் போல், என்னைப் பார்த்து, "உன் நெற்றிப் பசலை நனி மிகு அழகு" என்று கூறினான்; அவ்வாறு கூறவே சினத்தால் அறிவிழந்து போகவே, அவன், பகைவராலும் பாராட்டத்தக்க பெரும் சிறப்புடையான் என்பதை மறந்துவிட்டு, "நண்ப ! நீ ஒரு நாணிலி" எனக் கடிந்து கூறிவிட்டேன்.”

"

அறியாமையின் அன்னை! அஞ்சிக்,
குழையன், கோதையன், குறும்பைந் தொடியன்;