பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

465

கால் ஏழுற்ற பைதடு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க வாங்க நின் துாங்கு அஞர் நிலையே”
- நற்றிணை : 30


இந்த அதிகாரத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பல செய்யுள்களிலும், இயல்பான அல்லது கற்பனைத் திறமான இந்தியக் கலையின் முழு முதல் மூலமாம் சிறப்பியல்புகளைத் தனியே காணலாம். இந்தியக் கலையின் நோக்கம், தொடக்க நிலையில் அழகுபடுத்துவதே; ஒன்றைப் பார்த்து, அதைப் பின்பற்றுவதன்று; கலைஞன், இலக்கியப் பொருளாகிவிட்ட இயற்கைப் பொருட்களை, ‘இற்று’ எனல் போல், உள்ளது உள்ளவாறே கூறிவிடுவதை விரும்பவில்லை; மாறாகத், தன் கையில் கிடைத்த அப்பொருளை அழகுபடுத்தவே விரும்பினான். அவ்வாறு அழகு செய்வதற்கான அளவிற்கு எல்லையே இல்லை. எடுத்துக் கையாண்ட பொருளின் ஒவ்வொரு சிறு கூறும், இயற்கையோடு கூடியதாகத் தெளிவாகப் புலப்படவல்ல, அணிகளின் சிறுகூறுகளால் அழகு செய்யப்பட்டிருக்கும். ஆகவே, செய்யுள் நடையில், ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கு முன்பும், ஒரு பெயரடைச் சொல் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் அடை, ஒரு தொடராக அமைந்துவிடின், அத்தொடரில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பெயர்ச்சொல்வின் முன்னும் ஒரு பெயரடை கொடுக்கப்படும். இம்முறை, கிரேக்கக் கலைக் கொள்கைகளில் பயிற்சி பெற்றிருக்கும் ஒர் உள்ளத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கி, ஆங்கிலத்திற்கு .மொழி பெயர்ப்பதை மிகக் கடினமாக்கும் வகையில், முழுச் செய்யுளையும் நோக்கும்போது, ஒவியங்களால் ஒப்பனை

த. வ.-80