பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

507

சொற்றொடரோடு இணைத்தே பொருள் கொள்ள வேண்டியுளது. ஆகவே, அச்சாஸனத்தை ஆக்கியோன் பால், பால்வேறுபாடு குறித்த உணர்வு அறவே இல்லாமை காணப்படுகிறது. பால்வேறுபாடு குறித்த உணர்வு இல்லாமையாம் இந்நிலைமை, அதை ஆக்கியோன் வழங்கும் பிராகிருத மொழி, தமிழ் மொழியின் தனிச்சிறப்பு வாய்ந்ததான பால் இலக்கணம் இல்லாக் குறைபாடு, காஞ்சிபுர மாவட்டத்தில் பெருவழக்கில் இருந்த பிராகிருதக் கிளை மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நிலையில், மதிக்கத்தக்க அளவு நீண்டகாலம், தமிழ் நாட்டில் பேசப்பட்டு வந்துளது, என்பதைக் காட்டுகிறது. சிவகந்த வம்மனின் சிலாஸாஸன மொழி மீது, ஆதிக்கம் செலுத்தும் தமிழ்ச் செல்வாக்குகள் வேறு சிலவும் உளவேனும், அவை ஈண்டு ஆராயப்பட மாட்டா.

இந்தியாவில் பதிப்பித்து வெளியிடப்பட்ட முதல், சமஸ்கிருத மொழி கல் எழுத்துப் பொறிப்பு. கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் மையப்பகுதியைச் சேர்ந்த மால்வ நாட்டு ருத்திரதாமுடையதாகும், இக்காலம் தொடங்கி, பிராகிருத மொழி கல்எழுத்துப் பொறிப்புகள், சமஸ்கிருத மொழி எழுத்துப் பொறிப்புக்களால், விரைவாக இடமாற்றிக் கொள்ளப்பட்டன. இவ்வுண்மை சிவகத்தவம்மன், பெரும்பாலும், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்து முன்னே, இல்லையெனில், இன்னமும் சற்று முன்னே ஆண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. திருவாளர் பவுல்கெஸ் (Foulkes) அவர்கள், பல்லவர்களின் இப்பழைய சாஸனங்களெல்லாம், ஆண்டின் முப்பருவங்களில் ஒரு பருவத்து, ஞாயிறு முதலாம் இருவாரகாலத்துப் பதின்மைக் கூறுகளால் நாட்களைக் கணக்கிடுவதன் மூலம், தெக்கணத்தில் கண்டெடுக்கப்பட்ட, கி. பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆந்திர எழுத்துப் பொறிப்புக்களில் பரவலாக இடம் பெற்றிருக்கும் முறையில் நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார். இது, பல்லவ அரசு, காஞ்சீபுர மாவட்டத்தில் இரண்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்கு