பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் 59. இறது. அது, பர்ஷியா வழியாகச் சென்றிருந்தால் "சிந்து" என்ற ஆற்றின் பெயரிலிருந்து வந்த இந்நாட்டின் பெயர் "ஹிந்து" என ஆனது போல, அச்சொல்லின் மொழி முதல் எழுத்தாகிய "எஸ்" பர்ஷிய வழக்காற்றில் "எச்" என ஆகியிருக்கும். ஆகவே, இம் மெல்லிய ஆடை, தமிழ்நாட்டுக் கடற்கரையிலிருந்து, பர்ஷியன் கடற்கரைக்குக் கடல் வழியாக, நேரிடையாகச் சென்றது என்றும், மெல்லிய ஆடையைக் குறிக்கும் பாபிலோனியச் சொல்லாகிய சிந்து' இதுவரை கருதிவந்ததுபோல், ஆற்றின் பெயரிலிருந்து பெறப்பட்டது அன்று மாறாக, துளு, கன்னட மொழிகளில் ஆடையின் ஒரு துண்டு எனும் பொருளில் இன்றும் வழங்கி வருவதும், கொடி எனும் பொருளில் "சிந்து' என்ற தமிழ்ச் சொல்லால் பிரிதிநித்துவம் செய்யப்படுவதுமாகிய பழைய திராவிடச் சொல் 'சிந்து' என்பதிலிருந்தே பெறப்பட்டது என்றும் நான் முடிவு செய்கின்றேன். - எகிப்துடன் பண்டை வாணிகம் : பெரு வாணிகத் தொடர்பு, தமிழ்நாட்டிற்கும், மெஸ்ப டோமியப் பள்ளத்தாக்கிற்கும் இடையில் மட்டுமே இருந்து விடவில்லை. தென்னிந்திய வாணிகம், கி. மு. 3000ல், எகிப்து வரையும் பரவுயிருந்தது என்பதற்கான சில அகச் சான்றுகளும் உள. திருவாளர் ஸ்காப் அவர்கள், கிரேக்கர் கள், தங்கள் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விடுபட்டு வெளிப்படுவதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுக்ட்கு முன்னரே, எகிப்தும், பழைய இந்திய நாடுகள் பலவும் நிலைபேறுடைய வாகிவிட்டன. தங்கள் தங்கள் நாட்டு விள்ை பொருள் களையும், செய்பொருள்களையும் கைம்மாற்றிக் கொள்ளுப ஒரு பெரு வணிக முறை, பொருள்களை மாற்றிக்கொள்ளு மைய இடத்தைப் பர்ஷிய வளைகுடாவின் தலைப்புக்கு அணித்தாகக் கொண்டு, வளர்ந்திருந்தது. அப்பகுதி மக்களாம், பல்வேறு அராபியப் பழங்குடியினர், குறிப்பாகபு புரிந்துகொள்ளமாட்டாப் புதிராக விளங்கும். சிவப்