பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 117

இவ்வாறு நயமாகக் கண்டிக்கப்பட்டான். நலங்கிள்ளி: நீ எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கும் உன் தம்பி பனந்தோட்டு மாலை அணிந்திருக்கவில்லை; ஆகவே அவன், உங்கள் குலப் பகைவனாகிய சேரன் அல்லன்; கரிய கொம்புகளைக் கொண்ட வேப்பம் மாலையையும் அவன் அணிந்திருக்கவில்லை. ஆகவே உங்கள் குல மற்றொரு பகைவ னாகிய பாண்டியனும் அல்லன் அவன்; உன்தலை மாலையும் சோழர்க்குரிய ஆத்தி மாலையாக உளது; உன்னோடு போரிடுவான் தலை மாலையும் ஆத்தியாகவே உளது; ஆகவே இரு வீரும் சோழர் குடியில் வந்தவர் உங்கள் இருவரில் யார் ஒருவர் தோற்பினும், தோற்பது சோழர் குடியே; போரில் இருவரும் வெற்றி பெறுவது என்பது இயலாது. சோழர் குடி தோற்றது என் பழிச்சொல் எழ, நீங்கள் நடந்து கொள்வது உங்கள் குடிக்குப் பெருமை சேர்ப்பதாகாது. மேலும் போர்க்கொடி பறக்கும் தேர்ப் படைகளோடு விளங்கும் உம் பகையரசர்கள் எள்ளி நகையா. இடம் வகுப்பதும் ஆகும்; ஆகவே, போரைக் கைவிடுக.”

               ‘இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
                கருஞ்சினை வேம் பின் தெரியலோன் அல்லன்;
                நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று நின்னொடு 
                பொரு வோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்று: 
                ஒரு வீர் தோற்பினும், தோற்பது உம் குடியே: 
                இரு வீர் வேற ல் இயற்கை யும் அன்றே; அதனால் 
                குடிப் பொருள் அன்று தும் செய்தி, கொடித்தேர்
                நும் மோரன்ன வேந்த ர்க்கு
                மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே';
                                               - புறம்.45

இப்பாக்கள், இனிய நயம் வாய்ந் துள்ளனவாயினும், அளிக்கும் செய்தி வறுமையால், அவை, வர மூலங்கனாகப் பயன்படுவ அல்ல. . . . .