பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழர் வரலாறு


தொலைவில் உளதே, எவ்வாறு செல்வேம் எனக் கலங்குவது செய்யார் ; இத்தகு படைநலம் உடைமையால், பகைப்புலம்தோறும் வெற்றித் திருவிழா மேற்கொண்டு சிறிதே இருந்து விட்டு, கீழ்க்கடல் பின்னிட்டுப் போக, உன் படையைக் சேர்ந்த குதிரைகளின், குளம்புகளை வெண்ணுரை தெறிக்க வீசும் மேற்குக் கடலின் அலைகள், அலைப்புறும் வண்ணும், நீ வெற்றித்திருவுலா மேற்கொள்வதும் செய்குவையே என்ற நினைவு அலைகள் அலைக்க, நெஞ்சு நடுநடுங்க, கண்ணுறக்கம் பெறமாட்டாது கிடப்பர். வடபுலத்து அரசர்களெல்லாம்";

"சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறந்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை,
உருகெழு மதியின் நிவந்து சேண்விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்,
பாசறை அல்லது நீ ஒல்லாயே!
நுதிமுகம் மழுங்க மண்டிட ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங்கலவே !
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த; நாடு நனிசேய,
செல்வேமல்லேம் என்னார் : நல்லென்
விழவுடை ஆங்கண், வேற்றுப் புலத்து இறுத்துக்
குணகடல் பின்னதாகக், குடகடல்
வெண்தலைப் புணரி நின்மான் குளம்பு அலைப்ப,
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே".
-புறம் : 31

இவ்வரிகளைப் படிப்பதில் நலங்கிள்ளி, தன் அரியணையை இழக்காமல் காத்துக் கொள்ளுதற்கு இடைவிடாது போரிட நேர்ந்தது என்பது பொருளாகிறது; இம்முடிவு சோழ