பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

255


"கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவலந் தண்பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பார்அர சாண்ட

மாலை வெண்குடைப் பாண்டியன்,"
- சிலம்பு : 17 : 1-5;

அந்த இமயத்தை, (அம்மலைத் தொடர்க்கு அவர் இட்டு அழைத்த பெயர்) எலலாவற்றினும் உயர்ந்த மலைமுகடு, வானவெளியின் காற்றழுத்த மண்டலத்தை எட்டிப்பிடித்துத் தன்னை ஏறி அடைய முயலும் மனித முயற்சியை இரக்க மற்று நகைத்தி வாறே நிற்க. ஒன்று, தன் கீழ் உள்ளதைவிட உயா்ந்து, ஒன்றான் மேல ஒன்றாக எணணிககையால் பெருகி நிற்கும் வாசை வாசையான மலை முகடுகளாலான, நிலத்துப் புறப்பகுதியின் வரிசை வரிசையான மடிப்புககளாகக் கருதாமல் தனித்த ஒரு பெரும் கல்லாம'-["பெருங்கல்"-புறம்: 17 : 1: "நெடுவரை"-புறம் : 6 : 1] என அப்புலவர்கள் கருதினர். தமிழப் புலவர்கள் பால் பொ ரு ந் தி வி ட் ட, இமாலயத்து நிலஇயல் கூறுபாடு பற்றிய அறியாமையே, கரிகாலனை, மிகப்பெரிய அம்மலைத் தொடரின் உச்சியை அடையவும், திபேத்து வரை செல்ல அம்மலையை ஊடுறவவும, பிற தமிழ் அரசர்கள், அவன் முன்மாதிரியைப் பின்பறறவும் செய்தமைக்குக் காரணமாம்,

நெடுஞ்சேரலாதன் பெயரைச் சுற்றி எழுந்த பிறிதொரு கட்டுக்கதை ஒன்றையும், புலவர் மாமூலனார் பதியவைத்து உள்ளார். அவன காலததே பாடப்பட்ட பாட்டாம் பதினொன்றாம் பதிற்றுப்பத்துப் பாடல் அளிக்கும் சான்றுப்படி, யானைமீது அவன கொணர்ந்த செல்வம் ("யானைப் பொலன் அணி எருத்தம் மேல் கொண்டு பொலிந்த நின் பலர்புகழ் செல்வம."), மாமூலனார் காலத்தில், அழகிய அணிகலககுவியல்களாகவும், பொன்னால் ஆன பாவையாகவும், வைரக்குவியலாகவும் பெருகிவிட்டது: ("யாசொல்