பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தமிழர் வரலாறு


புனைதேர் நேமி உருளிய குறைத்த

இலங்குவெள் அருவிய அறைவாய்."
-அகம் : 251 : 6-14

இறுமாப்பு மிகுந்த இம் மோகூர் என்பான், குட்டுவனால் தண்டிக்கப்பட்ட மோகூரான் தானா ? அல்லது அவன் பெயரே பூண்ட வேறு ஒருவனா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வழியேதும் இல்லை. ஆனால், யாரோ, சில மோரியர் என்பார், அவன் பகைவராய், அவனைப் பணியவைக்கக் கோசர் என்பாரை, முன்னதாக அனுப்பிவைத்தனர் என்பது மட்டும் உறுதி. கோசர் என்பார் து ளு நா ட் டி ல் வாழ்ந்தவராவர்.

"வாய்மையால் சிறந்த பெரிய அணிகலன்களை உடைய கோசர்க்கு உரிய, குடுமி உடையதான திரண்ட பச்சைக்காய் முற்றிய பாகற்பழத்தைத் தின்ற, பறைபோலும் வட்ட வடிவமான கண்களைக் கொண்ட தோகைகளையுடைய மயில்கள் மிக்க சோலைகளை உடைய துளுநாடு"

"மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித்

தோகைக் காவின் துளுநாடு"
- அகம் : 15 : 2-5.

பொன் வளம் மிக்க, கொண்கானத்தின்கண் உள்ள, நன்னனுக்கு உரிய நல்ல நாட்டில் இருக்கும் அழகு பொருந்திப் ஏழில் மலை வளத்தைப் பெறுவதாயிலும், உன்னைவிட்டுய பொருள்வயின் பிரிபவர் யார் ?

"பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு
ஏழில் குன்றம் பெரினும், பொருள்வயின்

யாரோ பிரிகிற்பவரே ?"
-நற்றிணை : 308 : 5-8