இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22 தமிழர் வரலாறு
பாவை சூழ்ந்தும், பல்பொறி மருண்டும். அகலாக் காதலொடு பகல் விளையாடிப், பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும், பொங்யா மரபின் பூமலி பெருந்துறைத், துணைப்புணர்ந்த மட்ம்ங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து, மட்டு நீக்கி மது மகிழ்ந்து, மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும், நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கிக் கொடுந்திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும், பாடல் ஒர்த்தும், நாடகம் நயந்தும், வெண்நிலவின் பயன் துய்த்தும் கண்ணடைஇய கடைக் கங்குலான், மாகாவிரி மண்ம் கூட்டும், தூ உ எக்கர்த் துயில் மடிந்தும், வாலிணர் மடல் தாழை வேலாழி வியல் தெருவில் நல் இறைவன் பொருள்காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள், காய் சினத்த கதிர்ச் செல்வன் தேர் மா அ பூண்ட போல, வைகல் தோறும் அசைவின்றி, உலகு செயக் குறைபடாது வான் முகந்த நீர் மலைப் பொழியவும், மலைபொழிந்த நீர் கடல் பரப்பவும், மாரி பெய்யும் பருவம் போல, நீரினின்றி நிலத்து ஏற்றவும்