பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

419


பண்டு இல்லை; ஆகவே, கடல்பிறக்கு ஒட்டிய குட்டுவனும் செங்குட்டுவனும் ஒருவராகார்; ஆகவே, செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பு, உண்மை நிகழ்ச்சியன்று : அது வெறும் கட்டுக்கதை என்ற அய்யங்காரின் முடிவுகள் சரியானவை ஆகா என்பது தெளிவாக்கப்பட்டது. பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய குட்டுவனும், வஞ்சிக் காண்டத்துப் பாட்டுடைத் தலைனாகிய செங்குட்டுவனும், இருவேறு பட்டவர் அல்லர் ஒருவரே என்பதும் உறுதி செய்யப்பட்டது.