பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 39

                ‘காய்சின மொய்ம் பின் பெரும்பெயர்க் கரிகால்
                 ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
                 சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் 
                 இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப் 
                 பதினொரு வேளிரொடு வேந்த சாய’.
                                          一அகம் :246 8-12

வெண்டினிப் போர்க்களத்தில், இரு பெருவேந்தர்களோடு குறுநிலத் தலைவர்கள் பதினொருவர் இருந்தது, கரிகால் சோழனின் சமகாலப் புலவர்களால் குறிப்பிடப்படவில்லை யாயினும் (அடிக்குறிப்பு: பாணர் குறிப்பிடும் இவ்வெண்ணிப் போர், கரிகாலன் சமகாலப் புலவர்களால் குறிப்பிடப்பட வில்லை என்பது தவறு. போர் நடந்த அவ்வெண்ணிவாயிலில், அப்போர்க்காட்சியைக் காணும் வாய்ப்பினைப் பெற்ற, அவ்வூர் குயவர் குலத்து வந்த பெண்பாற்புலவர். அப்போரில் வெற்றி கண்ட கரிகாலனிலும், அவனால் பெற்ற புறப் புண்துக்கு காணி வடக்கிருந்து உயிர்விட்ட சேரலாதனே நல்லன் எனக் கரிகாலன் கேட்கப் பாடிய பாட்டு ஒன்று புறநானூற்றில் (88) இடம்பெற்றுளது. அப்பாட்டை, இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில் எடுத்து ஆண்டு இருக்கும். திருவாளர். பி. டி. எஸ். அவர்கள், இங்கு இவ்வாறு கூறுவது ஏனோ? -மொழிபெயர்ப்பு ஆசிரியர்), அது காதுவழிச் செய்தியின் ஒரு சிறு உண்மைக் கூற்று ஆகும், கரிகாலன், தமிழ்நாட்டைத் தன் ஆட்சிக் கீழ்க் கொண்டுவந்த பெரு நிகழ்ச்சிகளில், ஒரு சிறு நிகழ்ச்சியான, சேரநாட்டைச் சேர்ந்த வாகைப் போர்க்களத்து ஒருநாள் போரில், ஒன்பது குறுநிலத் தலைவர்களின் தோல்வி பற்றிய செய்தியும், காதுவழிச் செய்தியின் ஒருசிறு உண்மைக்கூற்று ஆகும், இப்போர் பாணரால் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது, :சிறந்த வளம் கொழிக்கும் கரிகால் வளவன் முன் நின்று போரிடமாட்டாது, வாகைப் பறந்தலை என்ற போர்க் களத்தில், அவன் வெற்றிபெறத் தங்கள் ஒன்பது வெண்கொற்றக் குடைகளையும் நல்ல பகற்பொழுதிலேயே,