இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பழைமை புதுமைகளின் இணைப்பு
568
திருவாளர் அய்யங்கார் அவர்கள் முடிவு உண்மை நிலைக்கு முற்றிலும் முரண்பட்டது. தொல்காப்பியரும், அவர் கூறும் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்திருக்கும் சங்க இலக்கியப் பாடல்களும், அய்யங்கார் கூறுவதுபோல் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்குத் தாழ்ந்துவிட வில்லை; மாறாகக், கி. மு. நான்கு அல்லது மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்திலேயே ஒலிக்கத் தொடங்கிவிட்டன என்பதே, வரலாற்று நெறியொடு பட்ட உண்மை நிலையாம்,
—முற்றும்—