பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

69

"அரசிளங் குமாரரும் உரிமைச் சுற்றமும்,
பரத குமரரும், பல்வேறு ஆயமும்,
ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும்,
தோருகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்,
விண்பொரு பெரும்புகழ் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாட் போல
..........................................................
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்"
- கடலாடு காதை: 155 - 174.

இதில் கரிகாலனைப் ப ற் றி வ ரு ம் குறிப்பு. அரசிளங்குமாரர், அவர்தம் உரிமை மகளிர், வணிகர் குலச் செல்வங்கள், அவர்தம் ஏவல் மகளிர், ஆடவும், பாடவும் வல்ல மகளிர் ஆகிய பெருங்கூட்டம் உடன் வரச்சென்று, கடற்கரைக்கண்ணே, திரைச் சீலைகளை நாலவிட்டு, ஆரவாரப் பேரொவி எழக் கரிகாலன் புனலாட்டு விழா மேற்கொள்ளும் நிகழ்ச்சி, கோவலன் அத்திரி மீது அமர்ந்தும், மாதவி வையம் ஏறியும் கடலாடச் சென்ற நிகழ்ச்சிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளதேயன்றி, சிலப்பதிகார நிகழ்ச்சி நடைபெற்ற நிகழ்ச்சியாகவோ, அச்சிலப்பதிகார நிகழ்ச்சியோடு தொடர்புடைய நிகழ்ச்சியாகவோ, காணப்படவில்லை. மாறாக, இதில் கூறப்பட்டிருக்கும், கரிகாலன் கடலாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகாரக் காலத்துக்கு முந்திய நிகழ்ச்சி என்பதை உறுதிசெய்யும், வலுவான அகச்சான்று ஒன்றும் சிலப்பதிகாரத்திலேயே இடம் பெற்றுளது.

"மன்னன் கரிகால் வளவன் மகள், வஞ்சிக்கோன்
தன்னைப் புனல் கொள்ளத், தான் புனலின் பின்சென்று