பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழர் வரலாறு


கன்னவில் தோளாயோ, என்னக், கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்".

-வஞ்சின மாலை 11 - 15.

வஞ்சினமாலையில் வரும் இவ்வரிகளில், கணவன் கள்வன் அல்லன் என்பதைக் காவலன் முன் காட்டிவிட்டு வெளிப்போந்த கண்ணகி, "என் காதலனைக் கொன்ற கோன் நகர் இது ; ஆகவே இந்நகரை அழிப்பது தவறன்று ; அழிப்பேன்" எனக் கூறியவள், தான் பிறந்த புகார் நகரில் பிறந்து கற்பு நெறிகாத்த காரிகையர் எழுவரை நிரலே எடுத்துக்கூறி, "அவர்போல் யானும் ஒருபத்தினியேயாயின், அரசோடு மதுரையையும் அழிப்பேன்" எனக்கூறும் வஞ்சின உரையில், எடுத்துக் கூறிய அவ்வேழு பத்தினிப் பெண்டிருள் ஒருத்தியாக, புனல் விளையாட்டின் போது, வெள்ளம் அடித்துச் சென்றுவிட்ட கணவனாம் ஆட்டனத்தியைப் புனலோடு பின் சென்று கரைமீட்ட கற்பரசியாம் ஆதிமந்தியின் வரலாறு கூறும்போது, அவளை, "மன்னன் கரிகால் வளவன் மகள்" என அறிமுகப்படுத்தியுள்ளாள். அவ்வாறு அழைத்ததன் மூலம், அந்நிகழ்ச்சி சிலப்பதிகார நிகழ்ச்சிக்குக், காலத்தால் முந்தியதே என்பதை உறுதி செய்துவிட்டாள்.

ஆக, இம்மூன்று இடங்களிலும் கூறப்பட்ட திருமாவளவனோ, கரிகால் வளவனோ, சிலப்பதிகார நிகழ்ச்சி காலத்தவன் அல்லன் என்பதைத் தெளிவுபட உணர்த்திவிட்டார் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளார் என்பது உறுதிசெய்யப்பட்டது.

முடிகெழுவேந்தர் மூவர்க்கு உரியதான பாட்டுடைச் செய்யுளாம் சிலப்பதிகாரத்தைப் பாடிய இளங்கோவடிகளார், தம் காப்பியத்துக் கருப்பொருளில் புகார் நகரத்து நி க ழ் ச் சி க ளை ப் பாடும்போது, அப்புகார் நகரைத் தலைநகராகக் கொண்ட சோழப் பேரரசுக்குப் பெருமை சேர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் ஆதலாலும்,