பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 -ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு: 2

செங்குட்டுவன் காலம் :

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனைத் தொடர்பு படுத்திச், செங் குட்டுவன் காலத்தை உறுதி செய்வது கூடாது. Nor Can Senguttuvan’s date be fixed by the socalled Gajabahu Synchorism” என்கிறாா். திருவாளா் சீனிவாச அய்யங்காா் (History of the Tamils Page : 379)

இதற்கு அவர் காட்டும் காரணங்களுள் தலையாயது, கண்ணகி வழிபாடு குறித்து, உரைபெறு கட்டுரையும், வாழ்த்துக் காதையும் கூறும் செய்திகளில் காணப்படுவதாக அவர் கருதும் முரண்பாடு.

- செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த விழாக்கான மாளுவ மன்னன் போலும் பல வேந்தர்களோடு கயவாகுவும் வந்திருந்தான் என்கிறது. சிலப்பதிகாரம்.

              “குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
               கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் 
               எம்நாட் டாங்கண், இமைய வரம்பனின் 
               நல் நாள் செய்த நாளணி வேள்வியில் 
               வந்தீகு என்றே வணங்கினர் வேண்ட” - . . -சிலம்பு : 30 :159 - 163.
ஆனால்,  உரைபெறு கட்டுரையோ, ‘அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக்க யவாகு என்பான். - பாடி விழாக் கோள் பன்முறை எடுப்ப’ என்கிறது. . -

மேலும், சோழன் பெருநற்கிள்ளி, கண்ணகி தேவிக்கு உறையூரில் கோயில் கட்டி விழா எடுத்தான் எனக் கூறுகிறது .