பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ~ xi — களால் அழகுசெய்து மகிழும் கண்பர் திரு. ம. ப. பெரியசாமியவர்கள் தம்மிடம் எஞ்சியுள்ள இசைப் பாடல்களையும் மேலும் புதிது புதிதாகப் பாடுவனவற்றையும் இப்பல்கலைக்கழகத்திற்கே கொடுத்து உதவுவார்களென நம்புகின்றேன். இவர்களுக்கு நீண்ட வாழ்நாளும் இளமைச் செவ்வி நலங்குன்றாத உடலுரமும் ஊக்கமும் ஏனைய நலங்களும் உண்டாகும்படி எல்லாம் வல்ல தில்லைக் கூத்த்ப்பெருமான் திருவருள் புரிவாராக . இந்நூலில் காணப்படும் அடையாள விபரங்களும், தெளிவான சுரதாளக் குறிப்புக்களுடன் பாடல்களைப் பதிப்பித்திருக்கு முறையும், பழைய இசையமைப்பிலுண்டான ஐயப்பாடுகளை நீக்கி விளக்கஞ் செய்திருத்தலும் இது பிறவிடங்களிலிருந்து வெளிவந்த இசை நூல்களிற் காணப்படாத சிறப்பியல்புகளாகும். இவை இசைக்கலை யறிஞர் யாவரும் அறிந்து இன்புறத்தக்கனவாம். இவ்வாறே ஏனைய. தமிழிசை நூற்றொருதிகளும் விரைவில் வெளிவந்து தமிழன்பர்களுக்கு இசையமுது ஊட்டுவனவாக.

                                  இங்ஙனம்
அண்ணாமலை நகர்        மு.அருணாசலம்பிள்ளை,
11-7-1943                       தமிழ் ஆசிரியர்.